Sunday, October 26, 2014

கருவானாள் கருவாச்சி


புத்தகம் தொட்டதில்லை
புகழ் கவி படித்தும் இல்லை
பூமகளே உன் புன்னகை கண்டு
புது கவிகள் வடிக்கிறேன்
இன்று...!


புதிதாய் நான்
புவியினிலே உதித்திட
புயலாய் நீ மாறி
புகுந்து என்னை உலுப்பிட

பனித்துளி மேல் படர்ந்திருக்கும்
பச்சிளம் புற்களை
பார்த்து பரவசமாய்
பசுமாடும் மேய்வது போல்!


காளை நானும்பசி தீர்க்க
காதல் எனும் அழைப்பிதழ் கொண்டு
கன்னி உன்னை அழைத்தேனன்று


காளை நீயும் பொறுத்திரு
கைசேரும் நாள் வரட்டும்
கைவரிசை காட்டி விடு
என்று நீயும் சொல்லி விட்டு
கலைந்து நீயும் சென்றாயே-கண்ணே
என் கனவில் அன்று,,,!


கன்னி உன்னை கண்ட முதல்
கண்ணிழந்து கற்பிழந்து
காளை நானும் அலைகின்றேனே!
கண்ணால் எனை கற்பழித்து
காதல் என்ற வலை விரித்த


கருவாச்சி உன் நினைவுகளே
கவிஞனாய் எனை உருவாக்கியது...!

உருவாகும் ஒவ்வொரு கவிதைக்கும்
உந்தன் நினைவே-இன்று
கருவாகியது...!

0 comments:

Post a Comment