Wednesday, October 29, 2014

சிந்தையெல்லாம் சின்ன மயில்...!

சந்திக்கும் போதெல்லாம்
சகஜமாய் பேசிச் சென்றாலும்
உன்னைக் காணாத நாட்களின்

உறங்கா இரவு நேரங்களிலெல்லாம்
நரகத்தை கண்டேனடி...


நண்பர்களிடம் அரட்டையென்பதே
அடியோடு மறக்கடித்து
உறங்காமலே நாள் முழுவதும்
உன்னோடு உரையாட
என் மனதும் துடிக்குதடி...

உன் விழிகள் இரண்டும்
நிலவாகி போனதாலோ என்னவோ
என் உறங்கா நாட்களில்
இரவும் முடியாமல்
பகலென்பதே விடியாமலே கிடக்குதடி...

விழித்திருக்கும் நேரங்களிலும்
கனவாக வந்துச் சென்றும்
உறக்கத்தையும் பறித்துக்கொண்டதால்
என் படுக்கையறையில்
உளறலோடே தினமும் புரளுகிறேனடி...


உன் நினைவுகளோடு
அசைபோடும் உறங்காத இரவிலெல்லாம்
கொசுக்களின் ரீங்காரம் கூட
இதமான ரிதமாக
என் செவிக்குள்ளேக் கேட்குதடி...


இப்போதெல்லாம்
உறக்கமேன்பதே இரவில்
இல்லாத காரணத்தால்
அலுவலகத்தில் முழுநேர வேலையிலும்
உருப்பிடியாய் இடையிடையே
உறங்குவதும் ஒரு வேலையென
உருமாறி போனதடி...


அச்சிறுசிறு உறக்கங்களின்
ஊடாகவும் உன் குறுஞ்செய்தி
குறுக்காய் வந்துவந்து
என்னை எழுப்பிவிட்டு
கைக்கொட்டிச் சிரிக்குதடி...

உன் நினைவுகளினால்
தூக்கமே இல்லாததாலேயே
கிறுக்குக் பிடித்தாற்போல்
அனுதினமும்
கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்
கிறுக்கல்களாய் நானடி...!

0 comments:

Post a Comment