Wednesday, October 29, 2014

கயல்விழி களவாணி நீயோ?

உறக்கம் தொலைத்த பாவி நான்
களவாடிய களவானி நீ....
கண் மூடி படுத்தாலும்
கரு விழியில் உன் விம்பம்....

மறந்தும் கண் மூடவில்லை
தெரிந்தும் வருத்தபட வில்லை


களவாடிய கன்னியே,,,
கண் அசைத்திவிடு 

காதல் மொழி பேசி விடு...
கரை கண்ட கவிஞர் எல்லாம்
காதல் வயப்பட்டார்களா என்று தெரியாது


ஆனால் உன் கண்கள் கண்டால்
கல்லும் காதல் கொள்ளும்-
உயிர் 
பெற்று கவிதை சொல்லும்-காதலியே
பரிதவிக்கும் என் உள்ளத்திற்கும்
பாதை அறியா என் வாழ்க்கைக்கும்
விடை கொடுத்து..புது விதி எழுதிடு..!

0 comments:

Post a Comment