Friday, August 7, 2015

குமுறல்கள்

விளையாட்டுப் பேச்சை
வினையாகக் கொண்டு
உருவெடுத்தது காதல்


முத்தமிழாய் வந்து
உயிரில் பதிந்தவளே!
உன்னை இசைத்தமிழாய்
கண்டேன் அசைத்து
விட்டாயடி என்னை.


பூவிதழ் தைத்து
வேலி குருதி சிந்த
"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி
விலகி நின்றாய்,
அன்று,,,,,!


தேடித்தேடி
அலைந்தேன்
தேடியது கிட்டவில்லை
கிட்டியது தேவையில்லை


தேடல் நீண்ட வேளையில்
விழி வழியே இடிமழை!
மூச்சு வழியே சூறாவளி!
இதழ் வழியே எரிமலை!
உடலெங்கும் பூகம்பம்!
காரணம் அன்று -நீ
என் முன்னே!


மூன்று முடிச்சோடு
முழு நிலா பொட்டோடு
நிறை மாத கருவோடு
கையிலொரு சிசுவோடு


அன்று என்னை -நீ
எனக்குக் காட்டினாய் -
என் பெயரிடப்பட்ட -உன்
குழந்தையை அழைத்து.


குவளையில் பூட்டபட்ட
இதயம் குமிறியலும் சத்தம்
யார் கேட்க கூடும்????