Thursday, July 2, 2015

மலடி மனம்


அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து
அடியெடுத்து நீ வச்சாலும்
ஆண்டவன் கணக்கிலும் கூட
அறியா பிழை இருக்குமம்மா

மணமுடிச்சு மாசமாச்சு
மடி இரங்க மறுத்ததிங்கே
மாயம் தான் என்னவென்று
மருத்துவரை நாடுகையில்
மலடி என்று பட்டம் சூட்டி
மறைமுகமாய் அனுப்பிவைத்தார்,

மாசம் மூன்று போச்சே என்று,,!
மாமியாரும் முறைச்சு பார்க்க
மணமுடிச்சு வந்தவன் தான்
மனசறிஞ்சு நடப்பான் என்றா,

மணிநேரம் பார்க்காம -மூன்று
மாசமாக்க நிக்குறான்!-இல்ல
மனைவி என்று ஒருத்தி தேடி
மலடி என்னை ஒதுக்குறான்,

கட்டில் கால்களுக்கும் வாய்
இருந்தா கத்தி சொல்லும் -நான்
கட்டிலில தினம் கதறும் கத,

கருப்பைக்கும் வெறும்பைக்கும்
வேறுபாடு தெரியாம அடிவயிற்றில்
ஆண்டவனும் அறியமா
அமைச்சு விட்டான்,,,,!

மாமியாரின் ஆசையும்!
சாமியாரின் பூசையும்!
பலிக்காம போகையிலே
அதற்க்கு புனைப்பெயர்கள்
பல கொண்டு இப் புதுச்சமூகம்
அலைக்குதென்னை,,,,,,,,,!

பெத்தெடுத்து வளர்த்தாலும்
தத்தெடுத்து வளர்த்தாலும்
தாயவேன் நானும் என்று -தாங்கி
கொண்டேன் வலிகளையும் இன்று.!

0 comments:

Post a Comment