Thursday, June 25, 2015

துளியில் என் துடிப்பு,

இணையத்தில் சந்த்தித்தோம்
இதயத்தைப் பரிமாறினோம்
நான் இங்கே நீ அங்கே,,,!


சொந்தங்களின்
கேள்வி ஆணிகளால்
அறையபட்டிருக்கிறேன்
மருந்தாய் உன்
நினைவுகள் மட்டும்.


கடந்ததையும்
கடக்கப் போவதையும்
நினைக்கின்ற பொழுது
நடந்து கொண்டிருப்பதை
தூரத்திலிருந்து நோக்கும்
ஒரு புள்ளியாய் நான்,


தனித்தோ
துணையுடனோ
அர்த்தமற்றதாய் இருந்தாலும்
அனிச்சையாய்
தொடரவே செய்கின்றன...
வாழ்க்கைப் பயணங்கள்


புல்லின் நுனியில் பனித்துளியை
சிலர் நினைக்கக் கூடும்
தென்றல் வந்து தழுவி
கொண்டு கொடுத்த முத்தத்தின்
அடையாளமாய் என்று,,,,,!
உறையாத உமிழ்நீரோ?
உழைப்பின் முடிவில்
சிந்திய வியர்வை
துளியோ என்று!


யார் உணர்வார்??
வலிக்குமென்று அறிந்தும்
வன்மமாய் கால் பதித்து ஒருத்தி
காயப்படுத்தியதால் வந்த
கண்ணீர் துளி என்று....!

0 comments:

Post a Comment