Monday, November 23, 2015

பிரிதலின் பின் புரிதல்

தாய்மண்ணை ஏடாக்கி
சுட்டு விரலை கோலாக்கி
அன்பெனும் மையிட்டு
அகரம் பழக்கிய
அம்மா!

அதிகாலை நேரச் சூரியனை
ஞாபகப் படுத்தும் -என்
அழகிய தந்தை முகமும்...!

இசைக்கேற்று அசைந்தாடும்
மரங்கள் போன்ற -என்
தம்பி பாசம்மும்..!

சிணுங்கி விட்டுச் செல்லும்
தென்றல் போல் தங்கை
அன்பும்..!

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல் குளிர்
பரப்பும் சொந்தபந்த
அரவணைப்பு
என்று...!

கூடலில் உண்டான
இன்பத்தை அனுபவித்த
நான் இன்று...!
பிரிதலினால் உண்டான
வேதனையை தாங்க முடியாமல்
நெருப்பில் விழுந்த புழுவாய்

இறைவா திருப்பிக்கொடு
தேசத்தின் களைகளை..!
கலையவந்த எம் கருவிகளை.!
நாளைய இருளுக்கு விளக்கான
எம் விடிவெள்ளிகளை...!
சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....!
மலர்வதற்குள் பறித்துச்சென்ற-எம்
மனத்தோட்டத்து மல்லிகைகளை
திருப்பிக்கொடுத்துவிடு...

வேண்டுமெனில்
ஈடாக என்னையே தருகிறேன்

0 comments:

Post a Comment