அதிகார அவஸ்தையில்
சில்லுக்குள்
சிக்குண்ட சில்
வண்டுகளாய்,,,,!
பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய் -தாய்
மண் வாசனையை
தேடித் தேடி உயிர் கருகும்
பட்டாம் பூச்சிகளாய்..!
வழிந்தோடிய
இரத்த ஆறுகளை
வழி மறித்து
நின்ற
எலும்புக் கூடுகளை
நினைத்து
தேடலின்
கடைசி நுனியில்
அமர்ந்தபடி
திக்கற்றுத் தவிக்கும்
வாலிப மனங்களில்
இன்னும்
கண்ணீரில் தவிக்கும்
எல்லா மனங்களினதும்
ஏக சாட்சிகளாய்
இன்றும்
குருதியினால்
வரையப்படும்
கொடூரக் கவிதைகள்
தான் நம் தமிழ் இனம்
0 comments:
Post a Comment