Monday, November 23, 2015

வலி(ரி)யின் உ(எ)ச்சம்,!

முகாரிகளினாலும் பாடமுடியாத
உறைபனியின் முகடுகளிலும் 
கரையாத எம் வலியின் 
உணர்வுகளைமுக்காடு
போட்டு மறைத்துக்கொள்ள
முயன்ற போதும் பொத்துக்
கொண்டு வெளிவருகின்றது.

சப்தமின்றி மனதுக்குள்
சத்தியங்கள் செய்திட்ட
போதிலும் நடந்து வந்த
பாதையை மறக்க -மனம்
ஏனோ தயங்குகின்றது!.

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து விட்டு போகின்றாய் நீ!
ஊமைக் குயிலடி நான்-இன்று
உள்ளுக்குள் அழுகிறேன்
உன்னால்! -உன் ஓரிரு
வார்த்தைளோ மெல்ல
மெல்ல கொல்லுதடி!

மனித மனங்களும்
மரித்து போய் விட்டது
இறைவனோ கண்ணீரைப்
பரிசாக தந்து விட்டு -இன்னும்
மௌனம் காக்கின்றான்!

எத்தனை முறை -நம்
காதலை கொடுத்த
இறைவனுக்கு நன்றி
சொல்லியிருப்போம்...?

இன்று நம்மைப் பிரித்து
நன்றிக்கடன் செலுத்தும்
இறைவனுக்கு காதலின்
வலி தெரியுமா....?

நன்றாகத் தானடி இருந்தாய் -
என்ன ஆயிற்று உனக்கு...?

நேற்று இருந்த நீ!

இன்று இல்லை...,

என்ன ஆயிற்று...?

பதில் சொல்...?

வேண்டாமடி இந்த
மெளண மொழி!

உனக்கும் காதல் வரும்
தருணம் நான் உணர்த்த கூடும்
என் மெளண மொழி......!
வலியில் துடிதுடித்தே
இறந்து விடுவாய் நீ!

வேண்டாம்!

வேண்டாம்!

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன்
பெயர் அப்போதாவது
நீ என்னைக் காதலி -அவ்வேளை
மோட்சம் பெறட்டுமென்
காதல்,,

0 comments:

Post a Comment