Tuesday, January 20, 2015

விதியே விடை கூறு!

வாழ்கை கடலில் நீந்துகையில்
முன்னாடி சென்றவர்கள்
முன்னேறி இருக்கலாம்
மூழ்கியும் இருக்கலாம்..!
பின்னாடி வருபவர்களுக்கு
நான் முன்னாடிதான் ...!


முன்னாடி சென்றவர்களை
பார்த்து பொறாமை படவா,?
பின்னாடி வருபவர்களை
பார்த்து பெருமை படவா?


வயதை தொலைக்கிறோம்
பாசத்தை இழந்தோம்
பல வருடங்களாய்...
எதிர்காலத்திற்காக நிகழ்கால
சந்தோஷங்களை புதைத்து
பொருள் தேடுகிறோம்..
முழுமையாக செல்வோம் என்ற
நம்பிக்கை இல்லாமல்..


எல்லாமே கனவில் தான்
தாய் தந்தை தம்பி தங்கை பாசம்
வாரம் ஒரு முறை என்றானது!.
சில நேரங்களில்
மாதம் ஒரு முறைதான்
கைபேசி இல்லை என்றால்
எங்கள் பாசம் வெறும் காகிதத்தோடு
கரைந்து இருக்கும்......!


ஆந்தைகளும் ,
புல்லுருவிகளும்
வாழும் இவ்வுலகில்,
படித்த பள்ளிப்பாடம்
தோற்றுத்தான் போய்விட்டது...!
அனுபவ வாழ்க்கையே
படிப்பாகிப்போனது...!
விடை தெரியா வினாவுக்கு
தேடலே ............?
வாழ்க்கையாய்ப் போனது .


விடை தெரிந்தவர்களுக்கு
குழப்பம் கும்மியடித்தது ...!
சரியா...? தவறாயென.?
கணிக்கும் முன்னே ,
காலம் கடந்து விடுகிறது ..
வாழ்வு முடிந்து விடுகிறது ...!
விதியே விடை கூறு,
வினாவாகி போன என் வாழ்வுக்கு?

1 comment:

  1. You have used my image and not credited me. Please credit my work.

    ReplyDelete