Saturday, January 24, 2015

சாதிகள் கடந்து வா!

இது பொய்யர்களின் உலகம்!
வாழ்க்கையை இனிப்பாக்க
உண்மையை கசப்பாக்கி
கொண்டவர்கள் நாம்!


படிகட்டுகளுக்கும் சாதி
சொல்லிகொடுத்த சதிகாரர்
வாழும் பூமியிது!


தாகத்திற்கு தண்ணீர் கேட்க
சிரட்டையில் சிறுநீர் கொடுத்த
சிறுபான்மையினமடா இது!,


கடவுளின் சந்நிதி நெருங்க
காடையர்கள் தடை போட்ட
மாயலோகம் இது!


நியாயம் எல்லாம் அநியாயம்
என்று அடிமைகளாய் அடிமாடுகளாய்
அடித்தனுப்பிய வையம் இது!


மனிதம் பறிபோக
மாறிய சாதி வெறியன்
வாழும் நரகம் இது!


வெள்ளையன் வெளியேற
வெறிபிடித்தோர் வெங்காயங்கள்
வேர்விட்ட உலகம் இது!,


அத்தனையும் ஆடிய நீ
ஆள் அரவமற்ற வேளையில்
அடுத்த சாதி அழகியை.
புணர்வதற்கு "புறா" அனுப்புகையில்
சாதி எங்கேடா?
சட்டென்று மறைந்தது?

0 comments:

Post a Comment