Monday, February 2, 2015

விலை போகும் மானிடம்!

 மதுவின் போதையில்
மனிதத்தை விற்றீர்கள்..!
மங்கையை மனைவியாக்க
தன்னையே விற்றீர்கள்..!


விலைமாதுக்கு விலைபோன
விசமிகளே கேளுங்கள் -அவள்
விழிநீர் சிந்தும் வலிகளை!


கஞ்சிக்கு வழியின்றி -உம்
கட்டிலுக்கு வருபவள் தான்
கற்புக்கு பெயர்போன
கண்ணகி குலமடா அது!


காடயனாய் நீ மாறி-அவள்
கற்பை தின்று விட்டு
காசையும் வீசி விட்டு
வேசி எண்றும் ஏசி விட்டு ?
வேறு வீடு சொல்கின்றாயே!
வெட்கம் கெட்டவனே!


குருவியை போல் இரை தேடி,
கருவியை போல கட்டிலில் கிடந்தாள்
பசியென்ற நோய் போக்கவே...!
படுக்கையில் பிணமாய் கிடந்தவள்
பணமாய் தினமாய் உளைத்ததுவும்
பஞ்சப் பிணி போக்கதானே!


நிர்வாணத்தை நிரந்தரமாக்கி
அவள் வண்ண மேனியை
வரிகுதிரையாய் கீறியவரே
கேளீர் அவள் வலிகளை.


வசதியாய் சொல்லும்போது
விபச்சாரி, விலைமாது
நவீனமாய் மொழிகளில்
பாலியல் தொழிலாளி,
பட்டம் வசைபாடும்போது
வேசி, தேவடியாள்
வசதிகேற்றாற்போல் வைத்தீரே
வார்த்தையிலும்..படுக்கையிலும்!


விபச்சாரி என்று பெண்ணை காட்டும்
பெருச்சாளிகளுக்கு சொல்லுங்கள்.
பணத்திற்கு படுத்து எழுந்து
பசிதீர்த்துக் கொண்டவனும்
விபச்சாரிதானென்று,,,,!

0 comments:

Post a Comment