Monday, February 16, 2015

அப்பாவே ஆசான்.

அப்பப்பா தந்ததில்லை
அம்மப்பா கண்டதில்லை,
அனைத்தையும் அளித்தவர்

அப்பா நீ ஒருவர் தானே,


ஆண்வர்க்கம் அனைத்திலும்
இல்லை ஓர் தர்க்கம்
என்பதைப்புரிந்து கொள்ள
அப்பா நீர் சாட்சி!
ஆண் பெண் என்பதை
பால்கொண்டு அளப்பதைவிட
கற்ற நூல் கொண்டு
அளக்கச் சொல்வாயே!


கஷ்டமே அறியாமல்
காத்திட்ட என் அப்பா,
உன் பணி நான் எடுத்து
பொறுப்புக்காய் பொருள் சேர்க்க
புறபட்டேன் புது தேசம்,


பிடி சோறும் இறங்குதில்லை-
உன் பிறந்தநாளென்று
எண்ணுகையில்,-இன்று
மறந்தே போனது அப்பா-நீங்கள்
தொலைந்த நாளும் கூட,


வாழ்வின் ஆதாரம் நீயும் -எங்கோ
சேதாரமாய் போகையிலே
வலிக்கின்றது அப்பனே,!
எங்கள் வாழ்கையும்,-வழி
காட்ட நீயும் இன்றி-
தவிக்கின்றாள் அப்பனே
உந்தன் தாரமும்,,


முத்தாய் மூன்று அன்னைக்கு
சொத்தாய் கொடுத்து விட்டு
சொந்த பந்தம் விட்டு-எந்த
சிங்கள காடையனிடம் சிக்குண்டு
கிடக்கின்றாய் அப்பா?

பால்குடி மறந்து நானும்
பலவருடம் ஆனது அப்பா
பக்குவமாய் பேனை எடுத்தும்
பரிந்து பேச பாசம் இன்றி -நான்
பாரினிலே தவிக்கின்றேன் அப்பா,


முப்பதிரெண்டும் முன்னேகாட்டி
முத்து சிரிப்பினிலே முழு
தேசம் ஆள்பவன் நீயோ-இன்று
முகவரி இன்றி இருகின்றாய் அப்பா?


அப்பா(ஜெயராசன்) உன் பிறந்தநாளில்
கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை சேர்த்திடவும்
வக்கத்த உன் பிள்ளை நானும்
வாழ்த்துகின்றேன் வரியினிலே,


பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா,
15-02-2015

0 comments:

Post a Comment