Thursday, July 16, 2015

திசை மாறும் காதல்



கொஞ்சம் விலகி நின்ற போது!
நெஞ்சம் தாங்க வில்லையே
வார்த்தை இல்லாமல்..,
வாய்ப்பும் இல்லாமல்..,
உன் வட்ட விழிக்குள்
பார்க்கவும் இயலாமல்..,
சொல்லிய காதலொன்று
சிக்கி கிடக்குது -என்
நெஞ்சு குழிக்குள்.

நியாயமற்றதாய் தோன்றினும்
நீண்டு கொண்டே போனதே
நம் நேசம் வான் வெளி போல்.
உறவுகள் இருந்தும்
என் உயிர் நீயேன
உயில் எழுதி தந்தேன்
என் உயிர் ஓவியமே??

இப்படி உன்னுடன்
பழகிய நாட்களில்..,
உன்னை வெறுக்கும்
படி ஒன்றும் இல்லையே
பிறகெப்படி உன்னை மறப்பது

பார்வைகளின் மோதல்களால்
நொறுக்கப்படும் ஞாயிறுகள்..
முள்ளில்லா கடிகாரம்......
ரத்தமின்றி நடக்கும்
ஒரு இதய
அறுவை சிகிச்சை...

நித்தம் உன்னை நினைத்து..
நெஞ்சில் ஏற்படும் ரணம்
எனக்கு பழகிவிட்டது

நீ என்னை வெளியேற்றிய போதும்.
வருத்தப்படவில்லை அன்பே.

வேறொருவனை...,
குடியேற்றிய போது தான்...,
நொந்தளுதேன் - உன் இதயம்
ஒரு வாடகை வீடு என்ரறிந்து..!

0 comments:

Post a Comment