Saturday, June 20, 2015

நீயில்லா நினைவில்


கனவிலும் நினையாய்
என்றரிந்தும் ஏனோ,,,!
கண்ணிமையாது,
தவிக்கின்றேன் அன்பே!

விக்கல் வரும் வேளையில்
"நினைக்க நான் இருக்க
நினைத்தது யார் உன்னை??"
என்று நித்தமும் - நீ
யுத்தம் செய்த நினைவு...!

இன்று நினைத்தது
நீ இல்லை என தெரிந்தும்
நினைத்திருக்க மாட்டோயோ...
என ஏங்குகிறது என் மனது...!

மறக்க முடியவில்லை - நம்
முந்நாள் உறவுகளை..!
உயிர் போனாலும்
துறக்க முடியாது - எந்நாளும்
உன் பிரிவுகளை..!

தேடி வரும் போதெல்லாம் ,
நாடி நரம்புகள் அதில் ஓடும்
உதிர அரும்புகள் உறைவது
போல் சாடி சபிக்கிறாய் ! -ஏண்டி?
வாட்டி வதைக்கிறாய் ???

தாயே ! உன்தாயே சொன்னாலும்
ஒருமுறை கேள் மனசாட்சியை !
பாசம் கண் மறைப்பதால்
தெரியாது உள் சூழ்ச்சி !
வேசம் கலையும் வேளையில்
வெளிப்படும் பொய்ப் பேச்சே !

கருணைகொள் அன்பே,
இனியொரு துன்பம் சுமக்க
மனதில் வழுவில்லையடி.
கட்டியணைக்க வேண்டாம்-என்
கவிதை படித்துச்செல் போதும்

0 comments:

Post a Comment