Thursday, June 11, 2015

முற்களும் பூக்களும்,!

அழகை படர விட்டு
ஆயுதமாய் காவல்
காக்கும் காத்திரமான
படைப்பே முற்கள்,


நல்லவர் கெட்டவர் பாராது..
இன்மை வறுமை அறியாது
முற்களின் சொத்தை
அபகரிக்க சென்றுவிட்டால்
அவதிபட்டே திரும்பிடுவீர்


சட்டம் நீதி எல்லாமே அதற்க்கு
ஆண்டவன் வகுத்தது மட்டுமே
ஆடவர் சென்று கேட்டாலும்
அது சட்டம் மீறி செல்லாது


லஞ்ச ஊழல் இங்கில்லை
யார்க்கும் அஞ்சும் எண்ணமில்லை
வண்ணம் கொண்ட பூவெல்லாம்
இதன் கூர்மை பார்த்தால்
குளிர்ந்திடுமே,,,!


இரவும் பகலும் போலே,
இன்மை வறுமை போலே
நல்லது கெட்டது போலே.
ஆண்டவன் படைப்பில்
இன்னும் மாண்டு போகாமல்
முற்களும் பூக்களும்,!

0 comments:

Post a Comment