Wednesday, December 31, 2014

2015-வருக வருக புத்தாண்டே!

புத்தொளி பரவி நிற்க,
புது வசந்தம் வீசி வர,
இன்னல்கள் பறந்தோட,
இன்பத் தென்றல் எமை வருட,
வல்லமைகள் கரம் சேர்ந்த
வாழ்வெங்கும் மகிச்சி பொங்க,
வருக வருக புத்தாண்டே!  
***2015***

Saturday, December 27, 2014

குற்றும் விழியழகி

உன் மந்தகார புன்னகையும்
மதி மயக்கும் விழிகளும்
என்னை கதிகலங்க செய்யுதடி!
மந்திரித்த சேவல் போல,
மயிலே உன்னழகை கண்டு-இந்த
மன்மதனும் மயங்கி விட்டேன்!


இனியொரு முறையேனும்,
ஏறெடுத்து பார்த்து விட்டாள்,
பார்வையாலே பரிதித்டுவாயோ
என் வாலிப வயதின் வயதின்
வம்பு தும்பனைத்தையும்...!


உன் விழிபார்வை கண்டே
என் உயிரும் ஊசலாடுதே!-மீதி
மூடி வைத்த அழகையும்
முன் நின்று பார்க்க நேர்ந்தால்-என்
உயிர் மூச்சும் நின்று போகுமோடி! 


ஆழ்கடல் தாண்டி செல்லும்
உன் அறியா பார்வையாலே!
அத்தனையும் செயலிழந்து
அடிமனது சொல்கின்றது-என்
அடிவானுக்கு சொந்தக்காரி,
நீயொருத்தி தானாம் என்று!

Wednesday, December 24, 2014

நத்தார் நாயகனே!

மார்கழி மாத முன் பனிக் காலம்
கொட்டும் பனிப்பாளம்
வெடவெடுக்கும்

விடியற்கால சாமம்


மாட்டைக்குடிலில்
மரியாள் மடியில்
இடையர்கள் நடுவில்
மா மன்னவர் மழலை வடிவில்


பிறந்தது தொழுவமதில்-சுரந்தது
அன்பெனும் செல்வம்
அழுபவர் கண்களின் நீர்தனை
அன்புடன் துடைத்திடும்
மனம் கொண்டு
அடுத்தவர் வாழ்வில்
துயரினைக் கண்டு
அழுதிடும் நெஞ்சினை
அடைந்திடும் வழி


விளக்கிடும் வகையில்
வாழ்ந்திட்ட தேவமைந்தன்
வியந்திடும் கருத்துக்கள்
மொழிந்திட்டான்
விடிந்திடும் வாழ்க்கை
உழைப்பவர் வாழ்வில்
விரைந்திட்டு நாமும்
வரைந்திடுவோம் காவியம்


இளைஞர் எம்
முன்னோடியே
விடுதலைப் போராளியே..
நாமும் வருவோம்
உனது தடம்படித்தே..!
தோழனே ஜேசுவே
உன் பிறந்த நாளில் உமை
அன்போடே நினைவுகூறுகிறோம்..!


வொட்காவுக்கோ.! வைனுக்கோ.! அல்ல
கேக்குக்கோ,! புடிங்குக்கோ.! அல்ல
சாண்டாவுக்கோ.! சாந்தாவுக்கோ.! அல்ல
உன் தியாகத்தை மனதில் இருத்திட
உன் தடம் பற்றி நின்றிட..!


இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!

பருவம் வந்தாள் பாசமலர்!

பாசமலர் ஒன்று இன்று
"பருவம்" அடைந்தது
அதன் பாசம் வீசும் வேகம்
என் கோபம் பறந்தது


"அண்ணன்" என்ற உறவை
"அப்பன்" என்ற உறவாக மாற்ற
அன்பு "தங்கையவள்" அடைந்தாள்
பெண்ணின் அடுத்த நிலை!


பாசம் பலவகை
வேஷமில்லா பாசம்
உயர்வகை-அதில்...
தங்கைப் பாசம் தனிவகை!


சகோதரப் பாசமெனும்
சாகரத்தில் மூழ்கவைத்து
சந்தோஷத்தில் முகிழ வைக்கும்
உற்சாக உறவு தங்கை!


அண்ணன் அழுதால்
அவளும் அழுது...
அண்ணன் சிரித்தால்...
அவளும் சிரித்து...
வண்ணம் கூட்டும்
சின்னப் பறவை!  


இல்லமெனும் கூட்டில்
இன்பமிறைக்கும்
இனிய வானம்பாடி!
அண்ணனின் பெருமையை
அனைவருக்கும் பரப்பும்
ஆகாசவானி!


குடும்ப வானத்தின்
குளிரூட்டும் நிலவு,
கடுஞ்சொற்கள் தாங்காது
துவண்டு விடும் இலவு!
சில நேரங்களில் மட்டும்
சுகமான செலவு!

23-12-2014---->

அழைத்து விடு அழகியே!

தொலைந்த என் இதயம்
தொலைவில் செல்லும்
உன்னை தொடர்வதை கண்டேன்…!


மறந்த உன் முகத்தை
மலர்ந்த மலர்களில் எல்லாம்
மனத்துடன் கண்டேன்…!


மந்திரித்த சேவல்
போல் மந்திரமாய்-உன்
பெயரை மங்காமல் கூவுகிறேன்…!


சில்லறை சிரிப்படி உனக்கு;-ஆஹா
சிந்தனை சிதருதடி எனக்கு…!!
சித்திரையின் நித்திரையில்;
முத்திரையையாய் உன் கனவு…!!


மார்கழி குளிரும் மதி மயக்குதடி
உன் மான் விழிகள் காணமல்
என் உள்ளம் தவிக்குதடி!
கருங்குயிலே உனது
கானகக்குரல் கேளாமல் -என்
காதுகளும் கட்டறுந்து போனதடி!


தூங்க மறுக்குதடி என் விழிகள்..!-ஐயோ
கேட்க விரும்புதடி உன் மொழிகள்…!
அழைத்து விடு அழகியே!-மீண்டும்
உயிர்பித்து விடு பழகியே!

Saturday, December 20, 2014

இயற்கையின் இம்சைகள்!

இலங்கை திருநாடெங்கும்
இதமான மழை விழ்ச்சி!
பூத்து குளுங்கும்
பூந்தோட்டங்களும்
பார்த்து சிரிக்கும்
பழம்பெரும் குளங்களும்


ஆகாய சூரியனும் அடைமழைக்கு
வழிவிட்டு ஆறுதலாய்
அவனியிலே ஓய்வெடுக்க
சென்று விட்டான்!


தயக்கம் இன்றி மழையும்
தாறு மாறாய் பொழிவதை கண்டு!
திக்கி திணறிய விவசாயியும்
தட்டு தடுமாறி நிற்கின்றான்
தாரமாய் வந்தவளுக்கு
தானம் வழங்க முடியாமல்


இயன்ற வரை இல்லையென்றாமல்
இல்லாதவருக்கு அள்ளி
கொடுக்கும் இலங்கையருக்கே
இல்லமும் பறி போகும் நேரம்


வீசும் காற்றும் பொழியும் மழையும்
இழுத்தும் அடித்தும் செல்லும்
பலர் இல்லங்களை....!


விட்டு விட்டு பெய்த மழை
விடாமல் பெய்வதனால்
வீதியெங்கும் நீர்வீழ்ச்சி
வீரிட்டு பாய்கின்றதே!


முப்பாட்டன் தலைமுறைகளும்
முதுமைபெற்ற குலங்களுமே -உன்
குறும்பிலே சிதைந்து போகின்றது
ஐயோ பாவமடா ஆண்டவா!
நிறுத்தி விடு உன் விளையாட்டை!


அழகான கிராமங்களை உன்
மழையருவியால் அழித்து விடாதே
ஆண்டு தோறும் பொழியட்டும்
அளவான மழைவீழ்ச்சி
ஆண்டாண்டு வாழ வேண்டும்-அழியா
தமிழ்த்தலை முறைகள்!

Tuesday, December 16, 2014

பாடசாலை சிதறல்கள்!

பெற்ற "தாய்" மறந்திடினும்
பிறந்த "மண்" அழிந்திடினும்
கற்ற "கல்வி" அதை கற்பித்த "பள்ளி"
உன்னை மறவேன் என்றும்!


அதிகாலை ஆயிடிச்சா
அரக்க பறக்க எழுந்திடிச்சு
அரைகுறையா முகம் கழுவி
அடுத்த வீட்டு வேளியிலே
அலைமோதும் காற்சட்டையை
அரைமணிநேரம் போராடி
அதன் பின் எடுத்து போட்டு கொண்டு
அரைவயிறு கஞ்சி உண்டு
பாய்ந்து வீழ்ந்து செல்வேன்
பாடசாலைக்கு அன்று நானும்!


பட பட என்ற ஓசை நெஞ்சில்
அசம்புலி ஆரம்பிசு ஐந்து நிமிசமாச்சே
ஐயோ இன்று செத்தேன் நான்
சமாளிப்புக்கு பொய் தேடி
அவசரத்துக்கு அதுவும் இல்லை
"உதவி அதிபரும்" உபசரிக்க வந்திடுவேர்
வாங்கிய அடியுடன் வகுப்பறை
வரவேற்கும் என்னை!


ஆண்டு ஒன்றிலே,
அரிவரி நான் படிக்காம
"நிலா" டீச்சர் போட்ட அடி!
இன்றும் என் நினைவில்
நீங்காமல் இருக்கு இப்போ!


கைபிடிச்சு கலை படிக்க
கற்பித்த ஆசானே உமக்கு!
அழியா இடமுண்டு
என்றும் என் நெஞ்சில்!


அழகிய நண்பர் கூட்டதோடு
ஐந்தாம் வகுப்பு வரையில்
அலசல் புலசல் பலவும்
அடிக்கடி அடிதடியும்
அன்பின் அரவணைப்பும்!
எமக்கிடையே வந்து போகும்
மனதை மயக்கும் "கன்னியர்" சிலரும்


கல்லூரி கலைந்தவுடன்
மாணவ செல்வங்களின்
கல்லடி தாங்காமல்!
மாமா வீட்டு மாமரமும்
மறைவதற்கு இடம் தேடிய காலம்!


புலமை காட்ட என்று புலமை பரீட்சை
ஒன்று புது வடிவில் வந்திச்சு அன்று!
குங்கும பெயர் கொண்டு
குலவிளக்காய் ஒரு ஆசான்
"ரதி" டீச்சர் வந்தமர்ந்தா
ஆண்டு ஐந்து ஆரம்பத்தில்


அழகாய் பாடம் சொல்லி
அன்பால் என்னை அள்ளி
அணைத்து கொண்ட ஒரு ஆசான்
ஆண்டு பல கடந்தும் -அழியா
உருவமாய் என்மனதில் இன்றும்!


நண்பரோடு விளையாடுகையில்
நாடியில் வந்த தளும்பு-இன்றும்
நிலைத்திருக்கு நீங்க நினைவு போல
ஆயினும் என்ன பயன்!


காலம் கடந்திடிச்சு கடலும் தாண்டியாச்சு!
என் கனவுகளும் கலைந்திடிச்சு!
கடவுளிடம் வேண்டுகின்றேன்
மீண்டும் கல்லூரியில் நான்
கற்கும் படி செய்யுமாறு!

Saturday, December 6, 2014

நிலவும் நானும்!

தேய்ந்த நிலவை பிடித்து
தேவதை உன்னை விசாரித்தேன்
தேவனவன் துணையில் உன்
தேவதையும் நலம் என்றது!


சட்டென்று பல கேள்வி
சடுதியாய் தொடுத்தேன்
மூ வேளை ஆகாரம்
மூச்சு முட்ட உண்டாளா?
துயில் கொள்ளும் வேளையில்
தூக்கம் இன்றி தவித்தாளா?


அறுசுவை உணவையும்
அழகாய் சமைத்து போட்டாலும்!
அதை காட்டி இதை சாட்டி
அனைத்தையும் வெறுத்தொதுக்குவாளே!


சற்றே திமிரும் அவளுக்கு
முற்றே கோவம் வந்தால்!
முன்னிருப்பவரை கண் பாராமல்
கதை பேசி வெட்டி செல்வாளே!


என்னோடு பேச வந்தால்
எள்ளளவும் கோவம் இன்றி
எண்ணிய பலவும் பேசி தீர்த்து
எண்ணமெல்லாம் வளர்த்து விட்டு
என்னையும் மயக்கி விட்டு
எத்திசையென அறியமுன்
எழுந்தோடி செல்வளே!


பருவம் வந்த நிலவடி அவள்!
பரீட்சைக்கு தோற்ற வேண்டி
பகலிரவாய் படிக்கின்றாளோ-இல்லை
பாட்டு தான் பிடிக்கும் என்று
பண்ணிசை தான் கேட்கின்றளோ!


நேற்றுத்தானே பேசவில்லை
நெடுநாளாய் தெரிகின்றதே!
நெஞ்சமும் வலிக்குதடி! தோழி!
கொஞ்சம் அவளை அழைக்க சொல்லு
கொஞ்சி நாலு வார்த்தை பேச!


கொஞ்சிப்பேச நீ கெஞ்சிக்கேட்டது
மதி(நிலவு) எனக்கே வலிக்குதடா!
உண்மை ஒன்று சொல்கின்றேன் கேள்
உரைக்கும் படி இருக்குமாடா!


நிலவுக்கே தேவதையவள்
நித்தமும் உன் நினைவிலே தான்
பொங்குகடல் தாண்டி நீ இருக்க-அவளுக்கு
பொங்கி எழுகின்றது உன் நினைவுகளும்


அதிகாலை ஆகிடிச்சு தோழா-என்
ஆதவனும் வந்து விட்டான்!
வங்ககடல் மீதாணையடா
வருமொரு நற்செய்தி உனக்கு
வண்ண மலர்மாலையுடன்
வருந்தாதே தோழா! வருகின்றேன் நாளை!

Monday, December 1, 2014

ஏதடா இன்பம்!

பெண்மையின்,
மென்மை கண்டு
மயங்கி நிற்கும் மடையரே!
அதிலும் உண்டு
முற்கள் என்று
அறியதிருப்பதேனோ நீரும்!


சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை
நம்பாதேயென்று,
பேரறிவாளன் சொன்னதுவும்
உம் செவிகளுக்கு,
எட்டவில்லையோ?


எத்தனை துன்பங்கள்
அதிலேது இன்பங்கள்
பெண்மையிலும் உண்டோடா!
ஒரு நாள் இன்பமும்
மறுநாள் துன்பமும்
துரத்தியே கொள்ளுமடா!


பேரின்பம் பெரும் துன்பம்
பெண்களிடம் உள்ளதடா!
பேதையாய் நீ இருந்தும்
பெற்றவளுக்கு ஏதுவடா?
பெரிதாய் ஒரு இன்பம்!


பத்து மாதம் சுமந்து வந்து,
பகலிரவாய் பசி கிடந்தது,
பால் ஊட்டி வளர்த்து விட
பால்மணம் மாற முன்னே,
பாச முகம் மறந்துதானே -அந்த
பாவாடை பின்னே சென்று,
பாதியிலே உயிரை விடுறாய்.


வேணாம்டா இந்த இழவு,
விட்டு விடு அந்த துளைவை,
இல்லையேல் விழுந்துவிடும்,
நம் வீட்டிலும் ஒரு இழவு!

Friday, November 28, 2014

மனதில் நிற்கும் மாவீரரே!

புழுதி பறக்க பாய்ந்து வரும்,
கொம்பு சீவிய முரட்டு காளைகளை
மார் நிமித்து எதிர்த்து நிற்கும்
சிறுத்தை என் தமிழன் ..!!


வங்காளக் கடலும் ,
இந்தியப் பெருங் கடலும்-என்
வீட்டுப் பெண்களின் மீன் பிடிக்கும்
ஏரிகள் தான் என்றும்
நாம் எதிரிக்கும் புலிகள் தான்!


காற்றாகிக் கரும்புலிகளாய்
வெடித்துச்சிதறினீர்கள்!
கடலோடு கடலாகி
நீராகிப்போயினீர்கள்!
பட்டினியால் வாடி
வதங்கிப்போயினீர்கள்!
எதிரியின் பிடியில்

 நசுங்கிப்போயினீர்கள்

தேகத்தை திரியாக்கி
தியாகத் தீபமேற்றினீர்
இன்று எம் தேசமே
நாசமானதே தோழர்களே !!!  


மலைமலையாய்த்
தமிழர்களின் பிணங்கள் -ஈழ
மண்ணெங்கும் குவிந்ததன்று
தடுப்பார் யாரும் இல்லையே அங்கே!


கண்மணிகளே..!
கல்லறை வந்து
உமைக்கட்டித்தழுவி-எங்கள்
கவலைகள் சொல்லி
கண்ணீர் வடிக்க
தவிக்கிறது மனசு...


என்ன நடக்கிறது
எங்கள் தேசத்தில் இன்று?
எவனுக்குமே விளங்கவில்லை..!
புதைபட்டு மண்ணுள் புழுவாகி
போனான் தமிழன் என்று யார் சொன்னது?


வீட்டுக்கொன்றாய் விதையைக்கேட்டு
நாட்டுக்காக நட்டடு வைத்து!
கல்லறைக்குள் துயிலும்
கண்மணிகளே உமக்குத்தெரியும்.!
காற்றோடு கலந்திருக்கும்
கருவேங்கைகளுக்குத்தெரியும்.!


புதைபட்டுப் போகவில்லை-
தமிழன் அங்கே!
புதுநாடு பிறப்பெடுக்க! -
பூமிக் குள்ளே,!
விதையாகிப் போயுள்ளான் !

 

புன்னகை மன்னன் புலிகளின் தலைவன்!

கரும்புலியாய்
களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாயென்று
அந்த காடையர்கள் கூரினரே!
எத்தனை காலம்கடந்தும் – எம்
தமிழினம் காத்த கடவுளாய்
நாம் உன்னை கண்டு
கொண்டேயிருப்போம்…! 


நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் – அன்று
தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்…!


ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்து விரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று நாங்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்…!


உறவாட வேண்டிய இடத்திலேயே
முகாமே சிறைச்சாலைப்போல்
மாறிப்போனதால்
மூச்சுக்குள் உன் ஞாபகம்
வந்தபோதிலும் முடங்கி கிடந்தே
இரவல் வீட்டிற்குள்ளேயே
இறந்துகிடக்கிறோம்
அனாதையாய் நாம்…!


முன்னோடி தமிழனென
வானோடி வானம்பாடிகளாய்
வலம்வந்து வான்புகழை
வையகத்தில் வெளிக் கொணர்ந்தாய்
தமிழனையே தலைநிமிர வைத்த
தமிழ் மகனே…!


புன்னகையின் மன்னன்!
புலிகளின் தலைவன்!
"வேலுப்பிள்ளை பிரபாகரன்"
பல்லாண்டு காலம் நீங்கள் வாழ
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்!

உயிரி{றவி}ன் உருவம் அவள்!

வான் நிலவே!நம் உறவு
ஆண்டொன்று ஆனதின்று!
ஆகையாலே சிந்துகின்றேன்
உன் நினைவில் சிறு துளியை!


என்னத்த நான் சொல்ல
என்னவளே உனை பற்றி!
என் பார்வை பட்ட வரைக்கும்!
எல்லாமே அழகுதாண்டி


சந்திர பொட்டுக்காரி!
சங்கு கழுத்துக்கு காரி!
சடைமுடி அழகுக்காரி!
சந்தன மேனிக்காரி!


பால் வண்ண நிறக்காரி!
பாவாடை தாவணிக்காரி!
பார்வையாலே கொள்ளும்,
பாசக்கயிறுக்காரி!


கன்னி உனக்காய் காத்திருக்கும்
வேளையெல்லாம். -உன்னோடு
நேற்றிருந்த ஞாபகங்கள்
பூத்திருந்து தாலாட்டுது என்னை! 
 


அடிமுடி தேடிய கதைபோலே
முழுமதியே உன் நினைவில்
முழுமையடையா இக் கவியின்!
குறைதீர்க்க வர வேண்டும்-என்
குலவிளக்கை ஏற்றி நீயும்!


அகவையொன்று கடந்த உறவு
ஆண்டு பல தொடர வேண்டி!
ஆண்டவனை வேண்டுகின்றேன்!

Monday, November 24, 2014

திருமணம் மகிழ் மனம்!

சொந்தம் பல சூழ்ந்து நிற்க -என்
பந்தம் என்று வருபவளை-மஞ்சள்
கயிறு கொண்டு கட்டி-அள்ளி
அணைத்து கொள்ளும் வேளையது!


அல்லி பூத்தார் போல
அழகியவள் அங்கமெல்லாம்
ஆபரணத்தில் ஜொலிக்க!
ஆண் என்ற அகங்காரம்-அழகாய்
ஆடவன் உள்ளத்திலும்
சிறிதாய் பிறக்க!


அந்தி மாலைவேளை வரையில்
சின்னஞ் சிட்டுகள் இருவர்
கழுத்திலும் பட்டு ரோஜா!
மலர்மாலையும் தொட்டு
தவழ்ந்து விளையாடும் போது!


இருமனம் ஒரு மனமாகி
திருமணத்தில் இணைந்து
புதுமணம் மலர் மனம் கமழ
திருமணமும் இனிதே
நிறைவுறும் பொழுது!!


இராத்திரியின் நாயகனாய்!
இருளின் ரசிகனாய்!-இல்லற
வாழ்வின் முதல்வனாய்!
காமனவன் காவு கொண்டன்
அன்பு உள்ளம் இருவரையும்


இதமான இடம் தேடி!
இதழ் சுவை தனை நாடி!
இனிதான சுகம் தேடி!


இயற்கையின் மடியில் தவழும்
இல்லற வாழ்வின் குழந்தைகளா!
மணமக்கள் திகழ்ந்தனர்-முதல்
இரவு என்ற மூச்சடக்கி
முத்தெடுக்கும் பணியில்!


முதல் இரவு முடிவிரவாக
மும்மாதம் முக்குளித்து!
முத்து ஒன்று கருவானதை
முழுமனதோடு அறிந்து!!


ஈர் ஐந்து மாதம்
இரவு பகல் விழித்திருந்து
ஈருடல் ஓர் உயிராக்கிய உயிரை
இருபதே வினாடியில் -தாயவள்!
தவமிருந்து பெற்றெடுத்தால்!
தரணியிலும் உண்டோ மானிடர்க்கு
அதை விட வேறு இன்பம்!

Tuesday, November 18, 2014

வாய் பேசு கிளியே!

பாவாடை சட்டை போட்டு
பைங்கிளி நீயும் வந்தால்
பட்டினத்தாரும் பல்லிளிப்பார்
பாவையே உன்னை பார்த்து!


பால் நிலா உன்னை நினைத்து
பஞ்ச பூதங்களும் பாட்டிசைக்குமே!
பாவபட்ட உள்ளமடி இது
பாராமல் சென்றிடுமா உன்னை!


பச்சிளம் மழலை பேசும்
பச்சை பசும் சொல்லாய்
பாவையுன் மொழி இருக்க
பார்த்த உள்ளம் இது
பேசாமல் சென்றிடுமா தனியே!


கோதை நீ கோர்த்த வரிகளில்
கோடி சுகம் நானும் கண்டேன்
கோபத்தில் நீ குதித்தாலும் -என்
கோட்டைக்கு அரசிதாண்டி நீ!


ஆஹா வரிவரியாய் முட்டுதடி
அன்னக்கிளி சின்னக்கிளி
அசைந்தாடி வரும் செல்லக்கிளி
நம்காதல் முத்துக்குளி எப்போது!
மொழிந்து விடு என் மதுரங்கிளியே!!

Saturday, November 15, 2014

முழு பெயருடன் முதல்வரி வாழ்த்து!

(இ)-இல்லறம் சிறக்கவென்று
இனிதாய் வரம் வேண்டி 
சேகர்+சுகந்தி தம்பதிகள்
இனிய மணம் முடித்தவேளை!


(ரா)-ராத்திரிக்கு நாயகியாய்
ஆண் மயிலின் அழகுடனே
பெண் மயில் நீ பிறந்தாய்
பெற்றோர் மனம் மகிழ!


(ச)-சகானா என்று பெயர் சூட்டிட 
சுட்டி தனம் நீ காட்டிட 
உன் குட்டிக் குறும்பனைத்தையும்
கட்டி காத்து காவல் நின்றனரே!
 உன் தாய் தந்தையரே!


(சே)-சேற்றை வாரி நீ பூச
சேர்ந்தே தாமும் பூசிவிட்டு
செல்ல மகள் நீ மகிழ
சேர்ந்தே தாமும் சிரித்தனரே!
வஞ்சம் இல்லா நெஞ்சதோரடி
உனக்காய் வாழும் பெற்றோர்கள்!


(க)-கண்டிக்கும் வேளையிலும்
சுதந்திர காற்றாய் பறக்க விட்டு
சுற்றித்திரிந்து நீ வந்த போதும்-அன்பால்
அள்ளி அணைத்து கொண்டவர்கள்
உன் அன்னை தந்தையரே!


(ர்)-ர்ர்ரர்ர்ர் என்ற ஓசையுடன்
ரீங்காரம் பாடிவரும்-சில்
வண்டுகளும் வியந்து நிற்குமே
வாச மலர் ஒன்றுக்கு இன்று
பிறந்தநாள் என்றறிந்தால்! 


(ச)-சலசல என்ற நீர் வீழ்ச்சியின்
சத்தங்கள் ஓய்ந்தாலும்
கன்னத்தில் குழிவிழவே
கட்டழகி நீ சிரிக்கும் கலகலப்பு
தீராதே என்றும் உன் வீட்டில்! 


(கா)-காதலை விட்டெறிந்து
காவியம் தொட்டபோது நட்பென்ற
சொல்லுக்கு நாமிருவர் தான் என்று
நாடும் போற்றும் உறவு கொண்ட
நல்லுள்ளம் நீயடி தோழி!-உன்னை
நலம் வாழ வாழ்த்துகிறேன் நானும்! 


(னா)-னாவென்ற எழுத்துக்கு மணமுடிக்க
மாப்பிள்ளை தேடுவது போல-நாள்
முழுக்க சொல் தேடினேன் தோழி!
சிக்கிய எழுத்துகளையும்
சிக்காத சொற்களையும் கொண்டு
சிறு கவி நான் வடித்தேன் -தோழி
நீ உதித்த நாளுக்கு வாழ்த்துரைக்க!


உன் குறும்புச் சிரிப்புடனும்
குதூகலப் பார்வையுடனும் நட்பே -நீ
நலம் வாழ வாழ்த்துகின்றேன் நானும்!

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
"இராசசேகர் சகானா!"
 

Friday, November 14, 2014

சிறைச்சாலை!

பூக்கின்ற பூவிடமும்
பூவா செடியிடமும்
இரவோடும் பகலோடும்
பசுமையான வயலிடமும்
கரைபுரண்டு ஓடும் நதியிடமும்
சொல்லுங்கள்!


உம்மை கண் கொண்டு காண-சில
துயர்படும் மானிடமும்-பல
தூங்கா கயவர்களும்
சிறைக் கம்பியினுள்ளே
காத்திருக்கின்றனர் என்று! 


முடிச்சிட்ட கயிறொன்று
ஒருவன் மூச்சை நிறுத்தக்
காத்திருக்கிறது!
சிறைசாலை என்ற கூட்டுக்குள்


பாசமான்கள் சிலரையும்
பாவிகள் பலரையும்
அந்தப் பாசக் கயிறு
பார்த்திருக்கிறது! 


ஒருவன் எப்படி சாகக்கூடாது
என்பதை அவன் மரணம்
மற்றவர்க்கு உணர்த்தும்! 


ஒருவன் எப்படி வாழக்கூடாது
என்பதை அடிமையொலி மூலம்
உணர்த்திய பள்ளிக்கூடம் !
சிறைச்சாலை!

யார் செல்வந்தன்?


உழைத்துக் களைத்த
உடலுக்கு...
உறக்கம் வந்தால்
இடமென்ன...
பொருளென்ன..


அசந்து உறங்க
ஆறடி இடமும்
ஆங்காங்கே கிழிந்த
கந்தல் துணி கூட போதும்!


ஆனால்
அவ்வுழைப்பாளிகளின்
இரத்ததினை உறிஞ்சிக் குடிக்கும்
பணக்கார ஓநாய்களுக்கு
பட்டுமெத்தை இருப்பினும்
பறிகொடுத்து தவிக்கிறான்
தூக்கத்தை…


இதில் யார் செல்வந்தன்?

Sunday, November 9, 2014

கட்டழகியில்லா தனிமை!

நீர்  கொண்டு விழி தீட்டி!
நிலம் கொண்டு உடல் தீட்டி!
தீ கொண்டு உன் கோபம் தீட்டி!
வரலாறு கானா உன் புன்னகையை
வான் கொண்டு தீட்டி!
கட்டழகி உன் இடை வளைக்க
காற்றையும் கடன் வங்கினானே
கயவன் அவன் பிரம்மனும்!


பஞ்ச பூதத்தையும் பஞ்சாய் சுருக்கி
பைங்கிளியே உன்னை வடிவமைத்தானே
வஞ்சம் இல்லா நெஞ்சத்தான் போல
உன்னை வடிவமைத்த பிரம்மனும்


உன் கன்னத்தில் குழி விழுத்தி
என் காதோரம் சிரிபொலி விழுத்தி
காதல் என்ற வலை விரித்து-ஏன்
கவிழ்த்தாயடி காதலியே என்னை நீ !


காமம் என்ற உலகினிலே
காதல் என்ற போர்வை போர்த்தி
நகர்கின்றதே பலர் வாழ்வும்!
சிறகடிக்கும் மனதுக்கும் சிந்தயடக்க
வழி இன்றி தவிக்கின்றதே என் வாழ்வும்!


உடையளவு இடையளவு
அத்தனையும் வினாவி விட்டேன்
உலகளவில் கிடைக்கா உன்
உடல் அழகை அறிய
ஆண்டு பல காத்திரு என்று
அவகாசம் சொல்லி விட்டாயே!


நினைவெல்லாம் நீயாக
நியமெல்லாம் நினைவாக
நியமான உன் நினைவை
நினைத்தே கழிகிறது
நீ இல்லா என் வாழ்கை


தனிமை இரவில் உறங்கா நினைவில்
காதலி நீ வருவாய் கனவாக!
அது முடியும் பொழுதில்
விடியும் பகலில் தினம் நீ இருப்பாய்
என் கவியாக!

Wednesday, November 5, 2014

கண்மணியே நீ வாழ்க...!

பெண்ணே ...
உன் பெற்றோர் இட்ட
பெயரைக் கூட சுருக்கி
எத்தனை பெயர்கள்
வைத்தேன் உனக்கு
ஏன் தெரியுமா ...?


அத்தனை ஜென்மங்கள்-நீ 

என்னுடன் வருவாய் 
என்று அல்ல வாழ்வாய் 
என்று தான் அழைத்தேன்!

இது புரியா இமை அழகியே
ஏன் திட்டுகிறாய் என்னை
போட வெட்டிப்பயலே என்று...
ஒரே வார்த்தையில் கட்டி போட்டு 

ஓராயிரம் வார்த்தையில் 
வெட்டியும் போ(ய்)ட்டாயே!

வந்த இடம் வளம்  பெற்றேன்
சென்ற இடம் செல்வம் பெற்றேன்
கண்மணி உன்னை கண்ட இடத்திலே
என் உயிர் காதலை பெற்றேன்

கனவெல்லாம் நியமாக்கி 
கண்ணீரையும்  சுகமாக்கி ய நீ!
இதயத்தை ரணமாக்கி

இணை பிரிந்துபோனாயே
இதயமற்ற மனிதரோடு

உன் இதழ் சுவை கண்டதில்லை
இணை பிரிய நினைத்ததில்லை
இருக்கும் வரை இதயம் தந்து
இறந்தும் என் உயிரை தந்து 
உனக்காகவே வாழ்வேன் என்றும்!

நீ மன்னிப்பாய் என்று ...!


இதழ் விரியும் முன்
இதயம் ரசித்துவிட்டதால்
புன்னகை என்றேன்


இமை திறக்கும் முன்
கண்கள் வலித்துவிட்டதால்
கண்ணீர் என்றேன்


ஆனால்
உதயம் வரும் முன்
உணர்வுகள் பிறந்ததால்
காதல் என்றேன்


அந்த காதல்
கலையும் முன் காமம்
முடிந்ததால்
தாய்மை என்றேன்


நான் என்ற சொல்
நாட்டில் நாம் என்று
மருகும் முன் மறந்துவிட்டேன்


என் மனதை
நீ மன்னிப்பாய் என்று!

Sunday, November 2, 2014

சுட்டது சுடு சொல்!

அன்பைத் தேடி அலைவதனால்
உன்னுள் அன்பும்,
அடக்கமும், பாசமும், பண்பும்
இன்பமும், இனிமையும்
இனிதாய் வந்து தங்கும்


அதிகாரம் தேடி,
சதிகாரனாகி
சாதிக்கப் போவது என்ன ?
விதியே என்று நீயும்,
வீணாகத் தனிமைப் படுத்தப் படுவாய்
வீதியோரத்தில்...


அன்பைக் கொடுத்து விடு
அறிவைத் தந்து, பிறரை
ஆதரிக்கக் கற்று விடு
விதியை வென்று நீ
விண்ணை எட்டிடலாம்.


பிறரைச் சாடி
வதை மொழி பேசுவதால்
மிஞ்சுவதெல்லாம் உனக்கு.


பேயனென்ற பேச்சுத் தான்
நாயே என்றுன்னை
நாலுபேர் தள்ளி வைத்தால்
நீ போய் தனிமையில்
மெளனியாய் அஞ்சாதவாசம் தானே!


வேண்டாம்...வேண்டாம்
விட்டு விடு விவாதிப்பதை.
ஏற்றிடு பிறர் கருத்தை.
அது உனக்குச் சாதகமில்லை
என்றாலும்
சார்ந்து விடு அவர் பக்கம்
சாதிக்கலாம் நீ நிறையவே!

Saturday, November 1, 2014

ஆசை! ஆசை!


மண்ணின் மடியில் 
தலைசாய்க்க ஆசை!
மலருடன் மனம்விட்டு 

கதைபேச ஆசை!

நெஞ்சை நொருக்கும்
கொடிய இடியுடன்
கொஞ்சிக் குலாவி

கொலுபோக ஆசை!

மின்னல் பிடித்து 
வான் ஏற ஆசை!
ஜன்னல் வழியே 

மழைகாண ஆசை!

குடையின்றி சாலையில்
நெடுநேரம் நனைந்து
நடைபோட எனக்கு

நெடுநாளாய் ஆசை!

பௌர்ணமி நிலவில்
கடல் காண ஆசை!
பகல்விரிக்கும் இரவின்

உடல் காண ஆசை!

தலைகோதும் என்னவளின் 
மடிசாய்ந்து நானும்
சிலையாகிப் போயிடவே

பிடிவாத ஆசை!

நிலவோடு ஒரு நாள்!

நேற்றிரவு
நிலவை யாரோ
களவாடிவிட்டார்களாம்;

இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்லவெண்டுமாம்!


நட்சத்திரங்களெல்லாம்
இன்று காலைமுதல்
என்னை நச்சரிக்கின்றன;


நிலவை களவாடியது
நான்தானென்று தெரியாமல்
என்னிடமே!

முடியாது என்று
புறமுதுகு காட்டினேன்;

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன்முதலாக அன்று
பூமியிலிருந்து மழை பெய்திட
ஆரம்பித்தது!!


அழுகையில் மனமிளகி
அரைமனதாக ஒப்புக்கொண்டு;
அவைகளிடமே கேட்டேன்!

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!

உங்கள் சூரியத்தலைவன்
கண்டுபிடித்தால் -உங்களை
சுட்டெரித்திடுவானே என்று!?


விடை தெரியாமல்
விழிகளெல்லாம் நனைந்தன
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;

வினாவெழுப்பிய நானே
விடையளித்தேன்!

நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!


என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!

தாய்(நாட்டை)பிரிந்து!


உன் வயித்துல
என் முட்டி மடங்குமுன்னே
முக்காணியில பணம் சேத்தவளே!
உன் வயிறு கனக்கும் முன்னே
ஊர் கனைக்க பேரு வச்சவளே!
தொப்புள்க்கொடி வளருமுன்னே
எனக்கு தங்கத்துல கொடி புடிச்சவளே !


தூங்கிய ஊரை கதறி நீ எழுப்ப
கதறி விழுந்த என்ன பார்த்து
ஆனந்த கண்ணீர் விட்டு நீ அழ!
நான் அழ நீ சிரிச்ச அந்த பொழுதும்
மறக்குமா உன் வாழ்வினில் அம்மா!
சாமத்துல நான் கதற தாயே
உன் மடி சுரந்து உறங்கவச்ச!


புள்ளி மான போல கருப்பு புள்ளி வச்சி
முத்தத்தில தவள விட்ட !
மயிலிறகு கொண்ட கட்டி மல்லிகப்பூ
வச்ச வாசம் என் மூச்சுக்குள்ள நிக்குதடி!
பச்ச நிற மேல்சட்டை பவளநிற கால்சட்டை
எட்டி உதச்ச எனக்கு ஏர்பூட்டி நீ விட்ட!


மூத்த மகன் என்னோடு
முத்தாய் மூணு பெத்தெடுத்த
அதுல ஒன்னு உன் ஜாதி,


உன் உதட்டு சாயமெல்லாம்
என் நெத்தியில நீ வச்ச பொட்டுதானே!
உன் விரலால வச்ச மைய
மல்லிகபூ முத்தமிட்டு நீ அழிச்சியே அம்மா!


அம்மா என்னை பட்டுல படுக்கவச்சி
பட்டுன்னு கூப்டுவதும் சிட்டுன்னு கூப்டுவதும்
இன்னமும் இந்த செவி சவ்வ கிழிக்குதடி!
தாயை விட்டு தாய் மண்ணை விட்டு
தாய்லாந்து வந்து வருடம் இரண்டும் ஆனதே
வழியும் இன்றி வலியும் தொடர்ந்ததே


பார்த்தவரெல்லாம் காத்திரு என்றுரைக்க
காத்திருந்தவர் எல்லாம்
கடல் கடந்து சென்றனரே
அம்மா உன்னை காணமல்
அன்புதனை அறியாமல்
அலைமொதுகின்றதே என் உள்ளமும்


என்று அந்த நாள் என்று
எத்தனை நாள் காத்திருப்பது நானும்
வரிவரியாய் வலிபடிதேன்
இருந்தும் வளருகின்றதே
தாய் (நாட்டை)பிரிந்த
பிரிந்த வலிகள் என்னுள்!

Wednesday, October 29, 2014

அடங்காத (என்) ஆசைகள்!

ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகளை எல்லாம்
உன்னிடம் சொல்லிவிட

ஆசையாகத்தானிருக்கிறது!


விடியல் தலை காட்டும் வரை
மடியில் தலை சாய்த்துக்கொண்டு;
நொடியும் இடைவெளியின்றி,
பேசிக்கொண்டிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


மங்கிய நிலவொளியில்
பொங்கிய சாதத்தை
இங்கிதம் பார்க்காமல்ஊட்டிவிட;
ஆசையாகத்தானிருக்கிறது!

கண்ணிறம் கருப்பல்லவா!
செந்நிறம் உதடல்லவா!!
பொன்னிறம் மேனியல்லவா!!!
உன்னைப் பாடிவிட
ஆசையாகத்தானிருக்கிறது!

சோர்வோடு நீ இருக்கும்போது
மார்போடு அனைத்துக்கொண்டு;
உயிரோடு கலந்த உன்னைப்
பரிவொடு விசாரிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

பின்னால் உன்னை அமரவைத்து
முன்னால் போகும் வாகனங்களை
என்னால் முடிந்த மட்டும்
விரட்டிப் பிடிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


குளித்து விட்டு நீ தலை துவட்ட
தௌ¤த்து விழும் அந்த துளியில்
சிலிர்த்துக்கொண்டு நான் எழுந்து,
அப்படியே உன்னைக் கட்டிக்கொள்ள
ஆசையாகத்தானிருக்கிறது!


காதருகில் வைத்த அலாரம்
12 மணி இரவில் கதற
அலற லோடு நீ எழும்
அந்த தருணத்தில்
பிறந்த நாள் வாழ்த்துக் கூறி,
முத்தமிட
ஆசையாகத்தானிருக்கிறது!


நகத்தை நீ கடிக்கும்போது
நானும் அப்படியே செய்து
முகத்தை நீ திருப்பும்போது
நானும் அப்படியே செய்து
கோபத்தில் இருக்கும்
உன்னை மேலும் கோபமூட்ட
ஆசையாகத்தானிருக்கிறது!


நீ சிரிக்கின்றபோது
உனக்கு பின்பாகவும்;
நீ அழுகின்றபோது
உனக்கு முன்பாகவும்;
நீ நடக்கின்றபோது
உனக்கு பக்கமாகவும்
என்றுமே காவலனாயிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகள் எல்லாம்
உன்னுடன் நடந்துவிட,
ஆசையாகத்தானிருக்கிறது!

என் தாய்க்கு வாய்க்கும் மருமகள்.!

தெம்மாங்கு பாடி தேவதாஸ்
ஆக ஆசை இல்லை
தேன் மதுர தமிழோசையில்-தேன்

காவியம் பாடிடவும் தெரியவில்லை
இருந்தும் வடிக்கின்றேன்
என்னவளுக்கு ஒரு காவியம்,,!


மகத நாட்டு மன்னன் மகன் ,
இயக்கர் இன தலைவியை மணந்தோ
ஈழ மகுடம் சூடிக் கொண்டானடி?
என் இதய கனியே உன்னை மணந்தால்,
நான் எதற்கு மன்னன் ஆவது.?

பண்டார வன்னியன் ஆண்ட
பசுமை நிலத்தில் பவனி வருபவளே!
பாவபட்ட உள்ளம் ஒன்று-உனை
நினைத்து பரிதவிக்கின்றது,
பறந்தோடி வந்தால் குறை வந்து விடுமென்று
பொறுத்திருக்க சொன்னாயோ?


பொத்தி வைத்த ஆசை எல்லாம்,
உன் தமக்கையிடம் மொழிந்து விட்டேன்!
பொல்லாப்பு வந்து விட்டால்
பொறுமை இழந்திடுவேன்டி!


ஆண்டிரண்டு ஆகட்டும் அதன் பின்
பார்போம் என்று அமைதியாக சொன்னயே!-என்
அன்னை அவள் நிலை கண்டு
அதை நானும் ஏற்றேனடி

வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால்
எள்ளும் எண்ணையாகி வந்திடும் தான்!
என் மாமா/மி மட்டும் என்ன விதி விலக்கா?


கார்த்திகை வந்தால் கன்னி-நம்
உறவு வருடம் ஒன்று பூர்த்தி ஆகின்றதே!
நினைவிருந்தால் நிலை மாறாமல் நீ இரு
நிச்சயம் மணவாட்டி ஆக்குவேன்-உன்னை
என் அரண்மனைக்கு அரசி ஆக்கும் நாள்-வெகு
தொலைவில் தான் இருந்தும் பொறுத்திரு
அயல் தேசம் நான் சென்றால்
அதுவும் கிட்டி விடும்...


காத்திரு கன்னியே காலமெல்லாம்
துணை வருவேன்!
அவசரத்தில் முடிவெடுக்காதே
முத்தெடுப்பது எளிதல்ல!
முக்குளிக்க நாள் வரட்டும்!

பொன்னி உன் நினைவினாலே!
பொங்கி வருகின்றது கண்ணீரெல்லாம்-கை
குட்டை கனமாகியது காரணம் நீ என்பதால்!


தென்றலைப் போல நடப்பவள், நீ
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்,நீ
செந்தமிழ் நாட்டு திருமகள்,நீ
எந்தன் தாய்க்கு வாய்க்கும் மருமகள்.! நீ

பெயர் சொன்னாலோ பெரும்
பிரச்சணை சூழ்ந்து விடும்
தெரிந்தவர்கள் மொழிந்திடட்டும்
இலங்கை திரு நாட்டில்
இதய பூமியில் வசிக்கும்
என்னவள் பெயரை!

என் தந்தை எனக்கு ஆசான்.!

ஒவ்வொரு இடத்திலும்
உனக்கு பெயர்கள் வித்தியாசப்பட்டாலும்
எனக்கு பிடித்த பெயர்

அப்பா மட்டும்தான்!

உன்னைப்பிரிந்து..
வருடம் ஏழு ஆகிவிட்டதே-அப்பா!
நீ இல்லாத பொழுதுகள்
மின்சாரம் இல்லாத வீடாய்..!
மனிதர்களே இல்லாத காடாய்..!
அறுக்கும் முன் கத்தும் ஆடாய்..!
காட்சியளிக்கின்றது!


நீ என்னைப்பார்த்து சிரித்த..
கடைசி சிரிப்பு எது?
நீ என்னிடம் பேசிய..
கடைசி வார்த்தை எது?
நீ என்னைப் பார்த்த..
கடைசி பார்வை எது?
நீ என்னைத் தொட்ட..
கடைசி தொடுதல் எது?

முயற்சிகள் சிலநேரம்
முடக்கிவைக்கப்படும்பொழுது
தன்னம்பிக்கையாய் இதயத்தில்…
துளிர்த்து வருகிறாய் நீ!


நீ
உறவுப்பயணம் முடித்துச் சென்ற
அந்தி மாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய பகலே!
நிறைய பேசியிருப்பேனே அப்பா?

உன் குழந்தையாய் நானானதுபோல்
என் குழந்தையாய் நீயாவாயா?
நடக்கப்போவதில்லை என்றாலும்
நப்பாசையில் கேட்கின்றேன்

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இல்லாமல் போன நாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…பேசவேண்டும்!

கடிதம் கை சேரும் கணம்.

ஊனமான நெஞ்சம் மெல்ல
தத்தித் தத்தி
தாவும்!

இயலாமையில் தீக்கிரையாக்கிய
என் கவிதைகள் கொஞ்சம் சிறகு
முளைத்துப் பறக்கும்!

அறுப்பட்ட வீணை மனதில்
மெல்லிய கீதம்
இசைக்கப் படும்!

எரித்துத் தொலைக்கும்
என் வீட்டு நிலவு
குளிர் பரப்பும்!

என் காதல் வால்
முளைத்துத்
தாவித் திரியும்!

இத்தனையும் நடக்கும்!
ஊடல் உருகி
கூடலாகும் போது
அனுப்புவாயே
ஒரு கடிதம்!
அது வந்து சேரும் கணம்

மரணத்தின் வாசலில்.!



பல்லாயிரம் ஆசைகளைச் சுமந்து

பவனிவந்தேன் பாரில்நான்!
எல்லோரும் செயும் நல்லவையும்
தீயவையும் செய்திருப்பேன்! என்றாலும்
சுவனத்தில் ஈடேறவே
உலகில் பலசெய்தேன்! இன்று
எனது உள்ளத்து வேதனைகள் பற்றி
கடலளவு நான் கத்திக்கத்தி
குரல்ஓயுமட்டும் சொன்னாலும்
யாருக்கும் கேட்கப்போவதில்லை!

ஏ! இறைவா!
உத்தம்மான படைப்பாக நீ
எங்களைப் படைத்தாய்
நாங்கள் எங்களை மறந்து
எத்தனை தவறுகள் இழைத்தோம்!
உன்னிடம் அழுதுகேட்கிறேன்....
எல்லோரும் ஒன்றாக வாழ்ந்திட நீ-எண்ணிடு!
சாதித்துவ அரக்கர்களை அழித்திடு!-அப்போது
பிணமாய் உள்ள எம்காதுகளில்-அந்த
முணுமுணுப்புக்கள் எழாது!
உண்மை வழியை
உத்தம வழியை காண்பித்திடு!
எல்லோரும் இன்புற்றிருக்க....
எல்லோரும் இன்பமாய் உன்னருகில்வந்திட.....!

கனவு!

மனதில் ஆயிரம் கனவுகள்..!!
வறுமை ஒழிந்து
செல்வனாய் வாழக் கனவு..!!
அம்மாவிற்கு ஆயிரம் புடவை
புதிதாய் அளிக்க கனவு..!!
ஈரடுக்கு மாளிகையிலே
தந்தை அமர்ந்து உணவுண்ன
காணக்கனவு..!!
தங்கையின் கையில்
வையிரம் மின்ன நான் காண கனவு..!!
கவிஞனாய் நானும்
திரைப் பாடலில்
மினுமினுக்க கனவு..!!
கனவுகள் நினைவானதாக
நித்தமும் கனவு..!!

தாய்த்தமிழ்!

நீ கற்றுக்கொடுத்த தமிழ்மொழியால்
உன்மகனான நான் – தமிழ்
இலக்கியத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதைப்

பார் அம்மா...!


பல ஆண்டுகளாய் 

நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது காலம்!
பிணந்தின்னும் கழுகுகள் போல்
பணம்பண்ணும எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!

பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தைத் துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!


மீசை முளைத்தபின்னும் – முகத்தில்
முடி முளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் –என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாய்ப்பாலைப்போன்ற
பரிசுத்தமான உன் அன்பைத்தேடும்
ஈர் பத்து வயது பாலகனாய் நான்!!

மறந்து விடாதே!!!

எனக்கு இன்னும்- அந்த 
ஒற்றை வார்த்தை
கிடைத்தபாடில்லை 

உன்னிடமிருந்து......

என் எண்ணப் பறவைக்கு மட்டும்-
புதுப் புது சிறகுகள்-

முளைக்கின்றன உன்னைப் 
பற்றிய கவிதைகளாய்.....!!!

அந்த வார்த்தை மட்டும்

சொல்லி விடு....!!
சந்தக் கவிதைகள்-
காதல் 

மன்றத்தில் சிந்தாமல் சிதறாமல் 
மொத்தமாய் அரங்கேறும்
சத்தியமாய் சொல்லுகிறேன்!!!

நீ இதைச் செய்வதும்
நான் அதில் உய்வதும்
உன் கையில் பெண்ணே!!!
மறந்து விடாதே!!!

முள்ளும் மலரும் கல்லும் கரையும்!

புறாதூது அனுப்பினேன்
பூங்கொடியாள் பார்க்கவில்லை
பூங்கவிதை அனுப்பினேன்
பூங்காவனம் படிக்கவில்லை


பூம்பட்டு அனுப்பினேன்
பூவையவள் கிறங்கவில்லை
மலர்கொத்து அனுப்பினேன்
மங்கையவள் திறக்கவில்லை 


இதயத்தை அனுப்பினேன்
எங்கிருந்தோ வந்தாள்
உதயமே நீயென்றாள்
உயிர்மட்டும் என்னிடமில்லை!!

திருமண அழைப்பிதழ்.!



நெருடலில் நான்

நெருங்குகிறாய் நீ!
நிற்குலைந்தேன்
நிதானத்துடன்...
கைவைத்ததில்
களைந்தது
உடுப்பு மட்டுமல்ல..
உள்ளமும்தான்
உள்ளம் கொடுப்பாய்- என்று
உன்னிடம் நின்றேன்
உதடுகடிக்கிறாய்
விருப்பமாய் சொல்லியிருப்பேன்
விரல்தொட்டு நீ- நிற்க
விட்டு விடாதே!-என்று
ஆசை அவ்வளவுதான் என்றாள்
அந்நியோன்யம் குறைந்து விடும்
ஆதலால்
முற்றுமில்லாமல்...
முடிவுமில்லாமல்...
உருகி
மருகி
நிற்கிறேன்
மணவாளனாக-மணவாளியாக
அவன் ! அவள் !

அகரவரிசை காதல்..!

அன்பால் வளர்வது காதல்
ஆசை தருவது காதல்
இருவரை இணைப்பது காதல்
ஈருடல் ஓருயிராவது காதல்
உண்மை உரைப்பது காதல்
ஊக்கம் தருவது காதல்
எதிர்ப்பை வெல்வது காதல்
ஏழ்மை பாராதது காதல்
ஐயங்கள் இல்லாததே காதல்
ஒற்றுமை வளர்ப்பது காதல்
ஓரினமாய் இணைப்பது காதல்
ஔசித்தியம் வளர்ப்பதும் காதல்.


   "ஃ" இதுக்கு நீங்களே 
சொல்லுங்க பார்க்கலாம்?
 

சிந்தையெல்லாம் சின்ன மயில்...!

சந்திக்கும் போதெல்லாம்
சகஜமாய் பேசிச் சென்றாலும்
உன்னைக் காணாத நாட்களின்

உறங்கா இரவு நேரங்களிலெல்லாம்
நரகத்தை கண்டேனடி...


நண்பர்களிடம் அரட்டையென்பதே
அடியோடு மறக்கடித்து
உறங்காமலே நாள் முழுவதும்
உன்னோடு உரையாட
என் மனதும் துடிக்குதடி...

உன் விழிகள் இரண்டும்
நிலவாகி போனதாலோ என்னவோ
என் உறங்கா நாட்களில்
இரவும் முடியாமல்
பகலென்பதே விடியாமலே கிடக்குதடி...

விழித்திருக்கும் நேரங்களிலும்
கனவாக வந்துச் சென்றும்
உறக்கத்தையும் பறித்துக்கொண்டதால்
என் படுக்கையறையில்
உளறலோடே தினமும் புரளுகிறேனடி...


உன் நினைவுகளோடு
அசைபோடும் உறங்காத இரவிலெல்லாம்
கொசுக்களின் ரீங்காரம் கூட
இதமான ரிதமாக
என் செவிக்குள்ளேக் கேட்குதடி...


இப்போதெல்லாம்
உறக்கமேன்பதே இரவில்
இல்லாத காரணத்தால்
அலுவலகத்தில் முழுநேர வேலையிலும்
உருப்பிடியாய் இடையிடையே
உறங்குவதும் ஒரு வேலையென
உருமாறி போனதடி...


அச்சிறுசிறு உறக்கங்களின்
ஊடாகவும் உன் குறுஞ்செய்தி
குறுக்காய் வந்துவந்து
என்னை எழுப்பிவிட்டு
கைக்கொட்டிச் சிரிக்குதடி...

உன் நினைவுகளினால்
தூக்கமே இல்லாததாலேயே
கிறுக்குக் பிடித்தாற்போல்
அனுதினமும்
கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்
கிறுக்கல்களாய் நானடி...!

கற்பனையில் காதலன்!


மழைக்கு
காத்திருக்கும் உழவனாக....!!
மரணத்திற்கு தவம்
கிடக்கும் கிழவனாக....!!
அலை தொட கரையில்
காத்திருக்கும் பாதங்களாக...!!

நிலவை உரசும் மேகங்களாக.!!
உன் நினைவை உரசி
சென்றிடும் சோகங்களாய் ....!!
பூத்திருக்கும் பூவின் மேல்
காத்திருக்கும் வண்டுகளாக..!!
காற்றினில் மணம் பரப்ப
காத்திருக்கும் செண்டுகளாக..!!

மலைக்குன்றுகளின் தாகம் தீர்க்க
காத்திருக்கும் அருவிகளாக...!!
ஆதவன் வர இரைதேட
செல்ல காத்திருக்கும்குருவிகளாக...!!
தாய் மடி பிடித்து பால் குடிக்க
காத்திருக்கும் கன்றுகளாக..!!

இப்படியெல்லாம் எனது
காத்திருப்புகளும் தொடர்கிறது.....!!
மாதுவே நீ புறா முலம்
அனுப்பும் ஒற்றை தூதிற்காக...!!

படித்து படித்து மடித்து வைக்கப்பட்ட
கடிதங்களை எல்லாம் கவிதை வரிகளாய்
மொழி பெயர்த்து மனபெட்டியினுள்
அடுக்கி வைத்துள்ளேன்
என்றும் அழியா பொக்கிஷமாய் ....!!

உன் கற்பனை காதலன்....!

அம்மா..!

அன்னை என்றொரு ஆலயம்
அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .
காணிக்கை கேட்காத கடவுள் அவள்
தரணியில் காணக்கிடைக்கும் 

அவளின் அருள் .

பத்து திங்கள் கருவிருந்தேன் -அவள் 

பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் இவளை கொண்டிடவே ! 


பாசம் புரளும் வங்கி அவள்
வட்டி வசமின்றி முழுதும் தந்திடுவாள் .
பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்
பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .
எத்தனை பிறவி கொண்டாலும்
உன் மகனாய் வாழும் 

வரம்வேண்டும் அம்மா!

எல்லாம் பொய்...!

இந்த உலகவும் -பொய்
அதில் வாழும் உறவுகளும்
பொய்....!
மனிதனும் பொய் -அவன்
மனங்களும் பொய் -அவன்
வார்த்தைகளும் பொய்....! 


சிலைகளும் பொய்..!

சிற்ப்பங்களும் பொய்.....!
மனிதன் சுவாசிப்பதும் -பொய்
உயிர்வாழ்வதும் பொய்..!


விலங்குகளும் பொய்-அதன்
ஒசைகளும் பொய்...!
சங்கீதம் பொய் அதன்
ஆலபணைகளும் பொய்.....!
என்னை தவிர இங்கு எல்லாம்
பொய்...!

கயல்விழி களவாணி நீயோ?

உறக்கம் தொலைத்த பாவி நான்
களவாடிய களவானி நீ....
கண் மூடி படுத்தாலும்
கரு விழியில் உன் விம்பம்....

மறந்தும் கண் மூடவில்லை
தெரிந்தும் வருத்தபட வில்லை


களவாடிய கன்னியே,,,
கண் அசைத்திவிடு 

காதல் மொழி பேசி விடு...
கரை கண்ட கவிஞர் எல்லாம்
காதல் வயப்பட்டார்களா என்று தெரியாது


ஆனால் உன் கண்கள் கண்டால்
கல்லும் காதல் கொள்ளும்-
உயிர் 
பெற்று கவிதை சொல்லும்-காதலியே
பரிதவிக்கும் என் உள்ளத்திற்கும்
பாதை அறியா என் வாழ்க்கைக்கும்
விடை கொடுத்து..புது விதி எழுதிடு..!

கனவுகள் தொலைந்ததெங்கே...?

கறிவேப்பிலை தொட்டு
கத்தரிக்காய் கருவாடு 

 நச்சிரகம் முதல்
வெந்தயம் பெருஞ்சீரகம் வரை
தமிழ் கடைகளில்
எல்லாமே கிடைக்குதம்மா..!

தொலை பேசியில் அம்மாவை 

சந்தோஷ படுத்திய
சமநேரத்தில் இதயம் கனத்து 

கண்கள் பணித்தது.!

உள்ளே அம்மாவுக்கு
சொல்லாமல் ஒரு 

கண்ணீர் வாசகம்.
பக்குவமாய் பதமாய் சமைக்கவும்
பாசத்தோடு பரிமாறவும்
நீங்கள் தான் அருகில் 

இல்லையே!!!

எந்த கடையில் 

கிடைக்குமோ
தாயின் அக்கறையும் 

பராமரிப்பும்..!?

கல்லறை உணர்த்திய காதல்.!

யாரிடம் கண்ணில் படாத ஈரம்,
காதலை தொடங்கியவுடன் 

பட்டது... !!!
யாரிடம் சொல்லாத
காதல்,
அவளை பார்த்தவுடன் சொல்ல 

துடித்தது... !!!
யாரிடம் வாழத வாழ்க்கை,
அவளுகாக் மட்டுமே வாழ 

ஏங்கியது... !!!

யாருக்காவும் விடாத உயிரை
அவளுகாவே உயிரை 

மறித்தது... !!!
யாருக்காக கொடுக்காத உடலை
அவளுக்காகவே கல்லறைக்கு 

கொடுத்தது...!!!
அவள் கொண்டு வந்த மலரகாகவே
என் காதல் உண்மை என்று 

அவளுக்கு உணர்த்தியது... !!!

Tuesday, October 28, 2014

உன் உயிர் இது!


அழகிய உன் இதயத்தை
ஆள்வதற்கு தவம்
இருக்கிறேன்..!!!
இனியும் ஒருவன்
வரப்போவதில்லை
ஈடு இணை எனக்கு
எவனுமில்லை..!!


உலகறிய உன்னை
தூக்கி செல்கையில்,
ஊர் கூடி வந்தாலும்
கவலை இல்லை...!!
எத்திசையில் நீ
இருந்தாலும் உன்னை
ஏந்தி செல்ல
ஓடோடி வருவேன்..!!!


ஐயம் வேண்டாம் அன்பே,
ஒரு மாறாத உண்மை - என்றும்
நாம் ஓர் உயிராகவே
இருக்கிறோம்..!!!
இப்படிக்கு உன்
உயிர் காதலன்..!

Sunday, October 26, 2014

கருவானாள் கருவாச்சி


புத்தகம் தொட்டதில்லை
புகழ் கவி படித்தும் இல்லை
பூமகளே உன் புன்னகை கண்டு
புது கவிகள் வடிக்கிறேன்
இன்று...!


புதிதாய் நான்
புவியினிலே உதித்திட
புயலாய் நீ மாறி
புகுந்து என்னை உலுப்பிட

பனித்துளி மேல் படர்ந்திருக்கும்
பச்சிளம் புற்களை
பார்த்து பரவசமாய்
பசுமாடும் மேய்வது போல்!


காளை நானும்பசி தீர்க்க
காதல் எனும் அழைப்பிதழ் கொண்டு
கன்னி உன்னை அழைத்தேனன்று


காளை நீயும் பொறுத்திரு
கைசேரும் நாள் வரட்டும்
கைவரிசை காட்டி விடு
என்று நீயும் சொல்லி விட்டு
கலைந்து நீயும் சென்றாயே-கண்ணே
என் கனவில் அன்று,,,!


கன்னி உன்னை கண்ட முதல்
கண்ணிழந்து கற்பிழந்து
காளை நானும் அலைகின்றேனே!
கண்ணால் எனை கற்பழித்து
காதல் என்ற வலை விரித்த


கருவாச்சி உன் நினைவுகளே
கவிஞனாய் எனை உருவாக்கியது...!

உருவாகும் ஒவ்வொரு கவிதைக்கும்
உந்தன் நினைவே-இன்று
கருவாகியது...!