Monday, November 24, 2014

திருமணம் மகிழ் மனம்!

சொந்தம் பல சூழ்ந்து நிற்க -என்
பந்தம் என்று வருபவளை-மஞ்சள்
கயிறு கொண்டு கட்டி-அள்ளி
அணைத்து கொள்ளும் வேளையது!


அல்லி பூத்தார் போல
அழகியவள் அங்கமெல்லாம்
ஆபரணத்தில் ஜொலிக்க!
ஆண் என்ற அகங்காரம்-அழகாய்
ஆடவன் உள்ளத்திலும்
சிறிதாய் பிறக்க!


அந்தி மாலைவேளை வரையில்
சின்னஞ் சிட்டுகள் இருவர்
கழுத்திலும் பட்டு ரோஜா!
மலர்மாலையும் தொட்டு
தவழ்ந்து விளையாடும் போது!


இருமனம் ஒரு மனமாகி
திருமணத்தில் இணைந்து
புதுமணம் மலர் மனம் கமழ
திருமணமும் இனிதே
நிறைவுறும் பொழுது!!


இராத்திரியின் நாயகனாய்!
இருளின் ரசிகனாய்!-இல்லற
வாழ்வின் முதல்வனாய்!
காமனவன் காவு கொண்டன்
அன்பு உள்ளம் இருவரையும்


இதமான இடம் தேடி!
இதழ் சுவை தனை நாடி!
இனிதான சுகம் தேடி!


இயற்கையின் மடியில் தவழும்
இல்லற வாழ்வின் குழந்தைகளா!
மணமக்கள் திகழ்ந்தனர்-முதல்
இரவு என்ற மூச்சடக்கி
முத்தெடுக்கும் பணியில்!


முதல் இரவு முடிவிரவாக
மும்மாதம் முக்குளித்து!
முத்து ஒன்று கருவானதை
முழுமனதோடு அறிந்து!!


ஈர் ஐந்து மாதம்
இரவு பகல் விழித்திருந்து
ஈருடல் ஓர் உயிராக்கிய உயிரை
இருபதே வினாடியில் -தாயவள்!
தவமிருந்து பெற்றெடுத்தால்!
தரணியிலும் உண்டோ மானிடர்க்கு
அதை விட வேறு இன்பம்!

0 comments:

Post a Comment