Friday, November 28, 2014

உயிரி{றவி}ன் உருவம் அவள்!

வான் நிலவே!நம் உறவு
ஆண்டொன்று ஆனதின்று!
ஆகையாலே சிந்துகின்றேன்
உன் நினைவில் சிறு துளியை!


என்னத்த நான் சொல்ல
என்னவளே உனை பற்றி!
என் பார்வை பட்ட வரைக்கும்!
எல்லாமே அழகுதாண்டி


சந்திர பொட்டுக்காரி!
சங்கு கழுத்துக்கு காரி!
சடைமுடி அழகுக்காரி!
சந்தன மேனிக்காரி!


பால் வண்ண நிறக்காரி!
பாவாடை தாவணிக்காரி!
பார்வையாலே கொள்ளும்,
பாசக்கயிறுக்காரி!


கன்னி உனக்காய் காத்திருக்கும்
வேளையெல்லாம். -உன்னோடு
நேற்றிருந்த ஞாபகங்கள்
பூத்திருந்து தாலாட்டுது என்னை! 
 


அடிமுடி தேடிய கதைபோலே
முழுமதியே உன் நினைவில்
முழுமையடையா இக் கவியின்!
குறைதீர்க்க வர வேண்டும்-என்
குலவிளக்கை ஏற்றி நீயும்!


அகவையொன்று கடந்த உறவு
ஆண்டு பல தொடர வேண்டி!
ஆண்டவனை வேண்டுகின்றேன்!

0 comments:

Post a Comment