Wednesday, November 5, 2014

கண்மணியே நீ வாழ்க...!

பெண்ணே ...
உன் பெற்றோர் இட்ட
பெயரைக் கூட சுருக்கி
எத்தனை பெயர்கள்
வைத்தேன் உனக்கு
ஏன் தெரியுமா ...?


அத்தனை ஜென்மங்கள்-நீ 

என்னுடன் வருவாய் 
என்று அல்ல வாழ்வாய் 
என்று தான் அழைத்தேன்!

இது புரியா இமை அழகியே
ஏன் திட்டுகிறாய் என்னை
போட வெட்டிப்பயலே என்று...
ஒரே வார்த்தையில் கட்டி போட்டு 

ஓராயிரம் வார்த்தையில் 
வெட்டியும் போ(ய்)ட்டாயே!

வந்த இடம் வளம்  பெற்றேன்
சென்ற இடம் செல்வம் பெற்றேன்
கண்மணி உன்னை கண்ட இடத்திலே
என் உயிர் காதலை பெற்றேன்

கனவெல்லாம் நியமாக்கி 
கண்ணீரையும்  சுகமாக்கி ய நீ!
இதயத்தை ரணமாக்கி

இணை பிரிந்துபோனாயே
இதயமற்ற மனிதரோடு

உன் இதழ் சுவை கண்டதில்லை
இணை பிரிய நினைத்ததில்லை
இருக்கும் வரை இதயம் தந்து
இறந்தும் என் உயிரை தந்து 
உனக்காகவே வாழ்வேன் என்றும்!

0 comments:

Post a Comment