Friday, November 28, 2014

புன்னகை மன்னன் புலிகளின் தலைவன்!

கரும்புலியாய்
களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாயென்று
அந்த காடையர்கள் கூரினரே!
எத்தனை காலம்கடந்தும் – எம்
தமிழினம் காத்த கடவுளாய்
நாம் உன்னை கண்டு
கொண்டேயிருப்போம்…! 


நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் – அன்று
தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்…!


ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்து விரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று நாங்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்…!


உறவாட வேண்டிய இடத்திலேயே
முகாமே சிறைச்சாலைப்போல்
மாறிப்போனதால்
மூச்சுக்குள் உன் ஞாபகம்
வந்தபோதிலும் முடங்கி கிடந்தே
இரவல் வீட்டிற்குள்ளேயே
இறந்துகிடக்கிறோம்
அனாதையாய் நாம்…!


முன்னோடி தமிழனென
வானோடி வானம்பாடிகளாய்
வலம்வந்து வான்புகழை
வையகத்தில் வெளிக் கொணர்ந்தாய்
தமிழனையே தலைநிமிர வைத்த
தமிழ் மகனே…!


புன்னகையின் மன்னன்!
புலிகளின் தலைவன்!
"வேலுப்பிள்ளை பிரபாகரன்"
பல்லாண்டு காலம் நீங்கள் வாழ
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்!

0 comments:

Post a Comment