Friday, November 14, 2014

சிறைச்சாலை!

பூக்கின்ற பூவிடமும்
பூவா செடியிடமும்
இரவோடும் பகலோடும்
பசுமையான வயலிடமும்
கரைபுரண்டு ஓடும் நதியிடமும்
சொல்லுங்கள்!


உம்மை கண் கொண்டு காண-சில
துயர்படும் மானிடமும்-பல
தூங்கா கயவர்களும்
சிறைக் கம்பியினுள்ளே
காத்திருக்கின்றனர் என்று! 


முடிச்சிட்ட கயிறொன்று
ஒருவன் மூச்சை நிறுத்தக்
காத்திருக்கிறது!
சிறைசாலை என்ற கூட்டுக்குள்


பாசமான்கள் சிலரையும்
பாவிகள் பலரையும்
அந்தப் பாசக் கயிறு
பார்த்திருக்கிறது! 


ஒருவன் எப்படி சாகக்கூடாது
என்பதை அவன் மரணம்
மற்றவர்க்கு உணர்த்தும்! 


ஒருவன் எப்படி வாழக்கூடாது
என்பதை அடிமையொலி மூலம்
உணர்த்திய பள்ளிக்கூடம் !
சிறைச்சாலை!

0 comments:

Post a Comment