Tuesday, November 18, 2014

வாய் பேசு கிளியே!

பாவாடை சட்டை போட்டு
பைங்கிளி நீயும் வந்தால்
பட்டினத்தாரும் பல்லிளிப்பார்
பாவையே உன்னை பார்த்து!


பால் நிலா உன்னை நினைத்து
பஞ்ச பூதங்களும் பாட்டிசைக்குமே!
பாவபட்ட உள்ளமடி இது
பாராமல் சென்றிடுமா உன்னை!


பச்சிளம் மழலை பேசும்
பச்சை பசும் சொல்லாய்
பாவையுன் மொழி இருக்க
பார்த்த உள்ளம் இது
பேசாமல் சென்றிடுமா தனியே!


கோதை நீ கோர்த்த வரிகளில்
கோடி சுகம் நானும் கண்டேன்
கோபத்தில் நீ குதித்தாலும் -என்
கோட்டைக்கு அரசிதாண்டி நீ!


ஆஹா வரிவரியாய் முட்டுதடி
அன்னக்கிளி சின்னக்கிளி
அசைந்தாடி வரும் செல்லக்கிளி
நம்காதல் முத்துக்குளி எப்போது!
மொழிந்து விடு என் மதுரங்கிளியே!!

0 comments:

Post a Comment