Monday, April 13, 2015

சாதிக்கு சவுக்கடி

அரும்பு மலரும்
அதிகாலை வேளையிலே
ஈடற்ற ஓவியமாய்
கீழ்வானம் ஒளிர்ந்திடும் பொழுது


சாதி நிர்ணயிக்கும்
சாமானியர்களுக்கு சட்டென்று
சவுக்கடி கொடுத்து அடக்கும்
சரித்திர பார்வையில்-என்
இனத்தவனின் விவசாயம்


ஆட்டெரு மாட்டெரு என
அனைத்தும் அடியாய் இட்டு
இயந்திரம் கொண்டும் அடி
மாடு கொண்டும் அழகாய் உளுது


வெய்யிற் காலம் நோன்பிருந்து
வெருந்தரையில் சுருண்டு கிடந்ததும்
மணல் மண் பாத்தி கட்டி
மங்கையர் விரல் பிடித்து
மண்ணில் விதை ஊன்றி


ஓரிரு மாதம் போக
ஓங்கி வளர்ந்த தாளிலே
இலைபூச்சிகள் உயிர் வாழ
டெமட்டான்,பாஸ்போமிடான்
கொண்டு பாரிடை நோய்களை நீக்கி


மழை காற்று பாராமல்
பணிவிலும் இரவிலும்
படங்கில் கிடந்தது கொண்டு
பிடுங்கிய பயிரை வாங்கிய
சனல் கயிறு கொண்டு
சோடி முடிச்சு போட்டு
சோதனை வெள்ள கட்டும்
கட்டுகளையார் மறந்தீர்.


வீட்டுக்கு வந்தாச்சு பயிர்
விரல் சூப்பும் குழந்தை முதல்
கால் தடக்கும் கன்னியர் வரை
தகர கத்தி கொண்டு வெங்காயம்
தவழ்ந்து புரண்டு வெட்டிய கதை
வேதனையில் முடியுதின்று


வயித்துப் பொழப்புக்கு,
வெவசாயம்,வெங்காய
மூட்ட நாலஞ்சி,
ஊரெல்லாம் சுத்தி வரும்
மாடியில கோடியில,
இல்லாத சந்தோஷம்,
மாடு மேய்க்கும் வேலைல
வெங்காய விலையேற்றதில்
நிறைஞ்சிருக்கும்,,,!

0 comments:

Post a Comment