Monday, April 6, 2015

அழைத்திடு அம்மா!

அயல் நாட்டில் நான் அம்மா
அடிவயிறு கனக்கிறது அம்மா
அந்து சந்து பொந்து எல்லாம்
அழகிய உன் நினைவுகளேயம்மா,


அலைப்பாய் அலைபேசியிலென்று
என் ஆழ்மனம் சொல்கிறதம்மா
அழைக்கவில்லை நெடுநாளாய் என்று
என் அலைபேசியும் அழுகுறதம்மா


அன்புக்கே ஏங்கினேன் அம்மா -என்னை
அடிமையாய் நினைக்காதேயம்மா
பத்துமாதம் பகலிரவாய் நான்
பசியிருந்து பெற்றமகன் என்று!
பட்டையம் போட்டு பத்திரம் கொடுத்தாயே!


இன்று பாசம் எனும் பசி வாட்ட
பரிதவிக்கிறேன் உன் பாவிமகன்
அடுக்கடுக்காய் மிஸ்ட் காலும்
அடிக்கடி கொடுத்தேனே,
அழைக்கவும் தோனல்லையோ!
அன்பு மகன் படும் அவதியில் உன்
அடிவயிறும் எரியல்லையோ?


வரி வரியாய் கவி வடித்தும் -என்
வலி தீர்க்க முடியல்லம்மா
வசதியாய் நாம் வாழ
வழி ஒன்று பிறக்குமம்மா
விதி ஒன்று உண்டெனில்-நான்
விண்ணையும் எட்டுவேன் அம்மா

விளம்பரம் வேண்டாம் அம்மா
வினை தீர்க்க வருவேன் அம்மா,


அன்பாய் மூன்று வார்த்தை
அழகாய் அழைத்துவிடு என்
அடிமன சோகம் எல்லாம்
அடியோடு போய் விடும்-அதிசயம் 

நிகழும் எனில் அதுஉன்
அழைப்பிலே ஆகட்டும் அம்மா!!!!!

0 comments:

Post a Comment