Thursday, June 25, 2015

துளியில் என் துடிப்பு,

இணையத்தில் சந்த்தித்தோம்
இதயத்தைப் பரிமாறினோம்
நான் இங்கே நீ அங்கே,,,!


சொந்தங்களின்
கேள்வி ஆணிகளால்
அறையபட்டிருக்கிறேன்
மருந்தாய் உன்
நினைவுகள் மட்டும்.


கடந்ததையும்
கடக்கப் போவதையும்
நினைக்கின்ற பொழுது
நடந்து கொண்டிருப்பதை
தூரத்திலிருந்து நோக்கும்
ஒரு புள்ளியாய் நான்,


தனித்தோ
துணையுடனோ
அர்த்தமற்றதாய் இருந்தாலும்
அனிச்சையாய்
தொடரவே செய்கின்றன...
வாழ்க்கைப் பயணங்கள்


புல்லின் நுனியில் பனித்துளியை
சிலர் நினைக்கக் கூடும்
தென்றல் வந்து தழுவி
கொண்டு கொடுத்த முத்தத்தின்
அடையாளமாய் என்று,,,,,!
உறையாத உமிழ்நீரோ?
உழைப்பின் முடிவில்
சிந்திய வியர்வை
துளியோ என்று!


யார் உணர்வார்??
வலிக்குமென்று அறிந்தும்
வன்மமாய் கால் பதித்து ஒருத்தி
காயப்படுத்தியதால் வந்த
கண்ணீர் துளி என்று....!

உடல் இங்கு உயிர் எங்கே?

வாசுகியாய் அவளையும்
வள்ளுவனாய் என்னையும்
படைத்தவன் ஏனோ அவள்
மனதில் காதலை படைக்க
மறந்துவிட்டான்,


பேசியது கடுகாயினும்
பேச்செதுவும் வீணில்லை.
பேசாமல் அருகிருந்த
பேரின்ப நாட்களது.


தாயைக் கண்டாலும்
சலிப்பு வந்ததடீ! -உன்
வடிவில் பேயைக் கண்டாலும்
காதல் பிறக்குமடீ! -


கல் இருந்தும்,,
உளி இருந்தும்,,
சிற்பி இல்லை பெண்ணே!
கடல் இருந்தும்,,,
அலை இருந்தும்,,,,
நிலவது எங்கே கண்ணே!
உடல் இருக்கு
உயிரும் இருக்கு-உறவாட
நீ இல்லை மானே!


உயிரான உன் சுவாசம்
தனில் பயிரான என் நேசம்
இன்றோ புதிரான நிலையில்
புதிரான உன் அன்பில்
எதிரான நான் இன்று
புரியாத நிலையில்..?

Saturday, June 20, 2015

நினைவுப் பயணம்


காதலியை தினமும்
காண்பவனுக்கு நிலவு
மட்டுமே உருவகம் !
இதுவரை உன்னைக்
காணாத எனக்கு
நிலவும் ஒரு உருவகம்!

காதலி எனைத்தேடி
வருகின்ற நேரத்தில்
காய்கதிர்ச் செல்வனே!
கனலை உமிழாதே !
பாதங்கள் வெந்து
பாவையவள் துன்புறுவாள்
பட்டுடல் மேனியிலே
பாதகம் செய்யாதே !

விளக்கணைக்காமல்
சுற்றும் விட்டில்களும்,
விவரம் தெரியாமல்
கூவும் சேவல்களும்,
இதனிடையே என்னவள்
முறித்த சோம்பலும்,
அழகாக்கி விட்டதன்று -என்
குளிர் காலக் காலையை!!!

மூக்கோடு மூக்கை
முட்டியே சிரித்திடவே
முழுமையாய்த் தடைசெய்ததன்று
அவளுடைய முக்காடு,,,!

முத்தம் கொடுக்க
நான் போனாலே!
குத்தம் சொல்லி குதித்ததும்
உட்கார வைத்து உணர்வெல்லாம்
புரிய வைத்து உரிமையாய்
நெருங்கினால் ஒரே வசனத்துடன்
ஓடியே போனதும்......

இன்றோ............!

தண்ணிருக்குள் தவறி வீழ்ந்த
மரகட்டையாக நினைவுகளோடு
தத்தலித்து கொண்டிருக்கிறேன்
காற்றடிக்கும் திசையை
நோக்கியே என் பயணம்

கரை சேர்ந்து அவள் கரம் பிடித்து
வாழ்வேனா ......????
இல்லை கரை தேடியே
வீழ்வேனா .....????
காலம் பதில் சொல்லும்

நீயில்லா நினைவில்


கனவிலும் நினையாய்
என்றரிந்தும் ஏனோ,,,!
கண்ணிமையாது,
தவிக்கின்றேன் அன்பே!

விக்கல் வரும் வேளையில்
"நினைக்க நான் இருக்க
நினைத்தது யார் உன்னை??"
என்று நித்தமும் - நீ
யுத்தம் செய்த நினைவு...!

இன்று நினைத்தது
நீ இல்லை என தெரிந்தும்
நினைத்திருக்க மாட்டோயோ...
என ஏங்குகிறது என் மனது...!

மறக்க முடியவில்லை - நம்
முந்நாள் உறவுகளை..!
உயிர் போனாலும்
துறக்க முடியாது - எந்நாளும்
உன் பிரிவுகளை..!

தேடி வரும் போதெல்லாம் ,
நாடி நரம்புகள் அதில் ஓடும்
உதிர அரும்புகள் உறைவது
போல் சாடி சபிக்கிறாய் ! -ஏண்டி?
வாட்டி வதைக்கிறாய் ???

தாயே ! உன்தாயே சொன்னாலும்
ஒருமுறை கேள் மனசாட்சியை !
பாசம் கண் மறைப்பதால்
தெரியாது உள் சூழ்ச்சி !
வேசம் கலையும் வேளையில்
வெளிப்படும் பொய்ப் பேச்சே !

கருணைகொள் அன்பே,
இனியொரு துன்பம் சுமக்க
மனதில் வழுவில்லையடி.
கட்டியணைக்க வேண்டாம்-என்
கவிதை படித்துச்செல் போதும்

கைக்கிளை காதல்


அன்னப் பறவையைக்
கண்டாலும் கூட
அணைத்துக் கொஞ்சுகிற
ஆளில்லை நான்...
இப்போதெல்லாம் சின்னப்
பறவைகளோடும் -நிதம்
சிரித்துப் பேசுகிறேன்..!

அம்பு எய்திய மனம் -விம்மி
விம்மி வீழ்ந்தபின்னும்
வம்பு செய்த மனம்
கொண்ட என் ஆருயிரே,

எதை நீ தந்த போதும்..,
ஏற்று கொள்ளும் என்றும்
எந்தன் உள்ளம்..,

கைக்கிளை காதல்
எல்லாம் காமம்
இல்லை பெண்ணே...!
பெருமையல்லா உறவை
இழிவான காதல் என்று
இலக்கணமும் கூறவில்லை!

சதிராடும் இளமைக்கு
வடிகாலாய் இருக்கின்ற
காதல் உன்மனதில்
தோன்றா நிலைகண்டு
வேதனையில் துடிக்கின்றேன்;

வேரோடு வீழ்ந்திட்ட
மரம்போலத் தவிக்கின்றேன்
ஊரார் தூற்றுகிறார் -உன்
பின்னால் சுற்றுகையில்
ஆறாத புண்ணாக
ஆனதடி என்மனது!

இருள் சூழ்ந்த இரவினில்..,
என் இதயமோ தூரத்தில்..,
இமை மூடும் பொழுதினில்..,
என் கண்களோ நீரினில்

தனிமையின் சிறையில்,


சிரிக்க செய்த உன் சில்மிசங்களும்
சிந்திக்க செய்த சில கேள்விகளும்
நான் செய்த தவறுக்காய்
நீ என்னை திட்டிய நிமிடங்கள்
பிறகு என் மௌனம் கலந்த
கண்ணீரை கண்டவுடன்.-நீயே
என்னை சமாதான படுத்திய
நிமிடங்கள் அப்பொழுது என்னை
விட வேதனை பட்ட -உன்
முகமும்..மனமும்..,

பைத்தியம் பிடித்தாலும்.
பக்கத்தில் இருப்பேன்
பிரியவே மாட்டேன்.,எனும்
பிரியமான வார்த்தைகள்,
அனைத்துமின்று,,,!

முகிலாய் தோன்றி,
மேகமாய் படர்ந்து இறுதியில்
மழையாய் மண்ணோடு
மறைந்து போகும் என்று
யாரும் நினைக்கல்லையே!

அணுவணுவாய் ரசித்து
வாழ்ந்தேன் உன்னை -இன்று
அணுவளவும் நினையாமல்
வாழ்கின்றாய் நீ என்னை,

அக்காவிடம் சொல்லி வைத்தேன்
அந்தபுரத்தில் அவள் அல்லிப்பூ
அர்த்தசாமத்தில் மல்லிப்பூ-என்று
அத்தனையும் கானலாய்
மாற்றிடாதே பெண்ணே!

என் காதல்..,நான்
வார்த்தையாய் சொல்லித்தான்
உன்னை வந்தடைய
வேண்டும் என்றால்..,
அது என்னிடமே இருக்கட்டும்

ஆயிரம் அர்த்தம் சொல்லும்
உன் அழகிய விழிக்கு சொல்லு
அடங்கா வலியுடன் இவ் ஆண்மை
மெளணித்து இருகிறதென்று

அடிக்கும் தாயையே
அணைக்க ஓடும் குழந்தை போல
வெறுக்கும் உன்னையே
தேடி தினம் மனம் ஓடுது.

பாதை இது தான்..,
பயணமும் இது தான்..,
பதில் மட்டும் நீ சொல்..,
நான் - உன் வழிதுணையா?
இல்லை வாழ்க்கை துணையா?

Thursday, June 11, 2015

முற்களும் பூக்களும்,!

அழகை படர விட்டு
ஆயுதமாய் காவல்
காக்கும் காத்திரமான
படைப்பே முற்கள்,


நல்லவர் கெட்டவர் பாராது..
இன்மை வறுமை அறியாது
முற்களின் சொத்தை
அபகரிக்க சென்றுவிட்டால்
அவதிபட்டே திரும்பிடுவீர்


சட்டம் நீதி எல்லாமே அதற்க்கு
ஆண்டவன் வகுத்தது மட்டுமே
ஆடவர் சென்று கேட்டாலும்
அது சட்டம் மீறி செல்லாது


லஞ்ச ஊழல் இங்கில்லை
யார்க்கும் அஞ்சும் எண்ணமில்லை
வண்ணம் கொண்ட பூவெல்லாம்
இதன் கூர்மை பார்த்தால்
குளிர்ந்திடுமே,,,!


இரவும் பகலும் போலே,
இன்மை வறுமை போலே
நல்லது கெட்டது போலே.
ஆண்டவன் படைப்பில்
இன்னும் மாண்டு போகாமல்
முற்களும் பூக்களும்,!