காதலியை தினமும்
காண்பவனுக்கு நிலவு
மட்டுமே உருவகம் !
இதுவரை உன்னைக்
காணாத எனக்கு
நிலவும் ஒரு உருவகம்!
காதலி எனைத்தேடி
வருகின்ற நேரத்தில்
காய்கதிர்ச் செல்வனே!
கனலை உமிழாதே !
பாதங்கள் வெந்து
பாவையவள் துன்புறுவாள்
பட்டுடல் மேனியிலே
பாதகம் செய்யாதே !
விளக்கணைக்காமல்
சுற்றும் விட்டில்களும்,
விவரம் தெரியாமல்
கூவும் சேவல்களும்,
இதனிடையே என்னவள்
முறித்த சோம்பலும்,
அழகாக்கி விட்டதன்று -என்
குளிர் காலக் காலையை!!!
மூக்கோடு மூக்கை
முட்டியே சிரித்திடவே
முழுமையாய்த் தடைசெய்ததன்று
அவளுடைய முக்காடு,,,!
முத்தம் கொடுக்க
நான் போனாலே!
குத்தம் சொல்லி குதித்ததும்
உட்கார வைத்து உணர்வெல்லாம்
புரிய வைத்து உரிமையாய்
நெருங்கினால் ஒரே வசனத்துடன்
ஓடியே போனதும்......
இன்றோ............!
தண்ணிருக்குள் தவறி வீழ்ந்த
மரகட்டையாக நினைவுகளோடு
தத்தலித்து கொண்டிருக்கிறேன்
காற்றடிக்கும் திசையை
நோக்கியே என் பயணம்
கரை சேர்ந்து அவள் கரம் பிடித்து
வாழ்வேனா ......????
இல்லை கரை தேடியே
வீழ்வேனா .....????
காலம் பதில் சொல்லும்
காண்பவனுக்கு நிலவு
மட்டுமே உருவகம் !
இதுவரை உன்னைக்
காணாத எனக்கு
நிலவும் ஒரு உருவகம்!
காதலி எனைத்தேடி
வருகின்ற நேரத்தில்
காய்கதிர்ச் செல்வனே!
கனலை உமிழாதே !
பாதங்கள் வெந்து
பாவையவள் துன்புறுவாள்
பட்டுடல் மேனியிலே
பாதகம் செய்யாதே !
விளக்கணைக்காமல்
சுற்றும் விட்டில்களும்,
விவரம் தெரியாமல்
கூவும் சேவல்களும்,
இதனிடையே என்னவள்
முறித்த சோம்பலும்,
அழகாக்கி விட்டதன்று -என்
குளிர் காலக் காலையை!!!
மூக்கோடு மூக்கை
முட்டியே சிரித்திடவே
முழுமையாய்த் தடைசெய்ததன்று
அவளுடைய முக்காடு,,,!
முத்தம் கொடுக்க
நான் போனாலே!
குத்தம் சொல்லி குதித்ததும்
உட்கார வைத்து உணர்வெல்லாம்
புரிய வைத்து உரிமையாய்
நெருங்கினால் ஒரே வசனத்துடன்
ஓடியே போனதும்......
இன்றோ............!
தண்ணிருக்குள் தவறி வீழ்ந்த
மரகட்டையாக நினைவுகளோடு
தத்தலித்து கொண்டிருக்கிறேன்
காற்றடிக்கும் திசையை
நோக்கியே என் பயணம்
கரை சேர்ந்து அவள் கரம் பிடித்து
வாழ்வேனா ......????
இல்லை கரை தேடியே
வீழ்வேனா .....????
காலம் பதில் சொல்லும்
0 comments:
Post a Comment