Monday, February 16, 2015

அப்பாவே ஆசான்.

அப்பப்பா தந்ததில்லை
அம்மப்பா கண்டதில்லை,
அனைத்தையும் அளித்தவர்

அப்பா நீ ஒருவர் தானே,


ஆண்வர்க்கம் அனைத்திலும்
இல்லை ஓர் தர்க்கம்
என்பதைப்புரிந்து கொள்ள
அப்பா நீர் சாட்சி!
ஆண் பெண் என்பதை
பால்கொண்டு அளப்பதைவிட
கற்ற நூல் கொண்டு
அளக்கச் சொல்வாயே!


கஷ்டமே அறியாமல்
காத்திட்ட என் அப்பா,
உன் பணி நான் எடுத்து
பொறுப்புக்காய் பொருள் சேர்க்க
புறபட்டேன் புது தேசம்,


பிடி சோறும் இறங்குதில்லை-
உன் பிறந்தநாளென்று
எண்ணுகையில்,-இன்று
மறந்தே போனது அப்பா-நீங்கள்
தொலைந்த நாளும் கூட,


வாழ்வின் ஆதாரம் நீயும் -எங்கோ
சேதாரமாய் போகையிலே
வலிக்கின்றது அப்பனே,!
எங்கள் வாழ்கையும்,-வழி
காட்ட நீயும் இன்றி-
தவிக்கின்றாள் அப்பனே
உந்தன் தாரமும்,,


முத்தாய் மூன்று அன்னைக்கு
சொத்தாய் கொடுத்து விட்டு
சொந்த பந்தம் விட்டு-எந்த
சிங்கள காடையனிடம் சிக்குண்டு
கிடக்கின்றாய் அப்பா?

பால்குடி மறந்து நானும்
பலவருடம் ஆனது அப்பா
பக்குவமாய் பேனை எடுத்தும்
பரிந்து பேச பாசம் இன்றி -நான்
பாரினிலே தவிக்கின்றேன் அப்பா,


முப்பதிரெண்டும் முன்னேகாட்டி
முத்து சிரிப்பினிலே முழு
தேசம் ஆள்பவன் நீயோ-இன்று
முகவரி இன்றி இருகின்றாய் அப்பா?


அப்பா(ஜெயராசன்) உன் பிறந்தநாளில்
கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை சேர்த்திடவும்
வக்கத்த உன் பிள்ளை நானும்
வாழ்த்துகின்றேன் வரியினிலே,


பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா,
15-02-2015

காதலர் தின நல்வாழ்த்துக்கள்,!

எதுகை மோனை வடிவத்தில்,
கவிதை கோர்க்க சொற்கள் தேடி-உன்
பெயரையே கோர்த்துக் கொண்டு,
புலம்புதடி என் விரல்கள்... !


Happy Valentines Day friends,

அதிசயமே அவளங்கம்!

செவ்விதழ் பார்த்தவுடன்
செந்தமிழும் முட்டுதடி
உன் முகவரிக்கோர்-கவி

வரி தயங்காமல் எழுதென்று!


சகாராவை சார்பாக வளைத்து
வடிவமைத்த கன்னங்களடி-அங்கே 

ஈழமும் உள்ளதோடி
உன்னிரு விழிகளாக!
?

சிவனொளி பாதமும் உன்
சீர் கொண்ட நெற்றி மீது
புருவமாக படர்ந்து உள்ளதே!
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
அனைத்தும் காண்பதற்கு
அந்நியர்கள் செல்கின்றனரே!
அயல் நாட்டு தேசங்களுக்கு!

அதிஷ்டகாரன் நானும்
அயல் தேசம் செல்லாமலே
கண்டு விட்டேன் அழகியிடம்!
அதியங்கள் அத்தனையும்!


அன்பாலே அடிமையாக்கி
அறிவளே அழகனாக்கி
அதிசயத்தால் கிறுக்கனாக்கி
அமைதியாய் செல்கின்றாயே,
அயோத்தி நாட்டு அரசியைபோல்


ஆணையிது அறிந்துகொள்
அதிசயமடி உனதங்கம்-அவை
அத்தனையும் எனக்கே சொந்தம்

Tuesday, February 3, 2015

ஊனமும் உள்ளமும்!

வால் அறுந்த
பல்லிக்குத்தான்
வலிமை அதிகம் தோழா!

கிளைகள் உடைந்தாலும்
மரங்கள் மரணிப்பதில்லை
நேரம்வரும் போது-அவை
உணர்த்தும் ஊனம்
இருப்பினும் உயிர்வாழும்
அவசியத்தை...!

உறுதிகொள், நாம் சாய்ந்து
நடந்தாலும்!-நம்
சாதனைகளால்-என்றும்
நிமிர்ந்தே நிற்போம் என்று!

பிறப்பில் வந்தது ஏதுமில்லையே!
இறப்பில் வருவது ஏதுமில்லையே!
நிகழ்வுகள் மட்டுமே நிதர்சனமே!
அகன்று விரிந்த ஆல் போல்-உன்
சிந்தைகளனைத்தும் சிறக்கடும் தோழா,!

Monday, February 2, 2015

விலை போகும் மானிடம்!

 மதுவின் போதையில்
மனிதத்தை விற்றீர்கள்..!
மங்கையை மனைவியாக்க
தன்னையே விற்றீர்கள்..!


விலைமாதுக்கு விலைபோன
விசமிகளே கேளுங்கள் -அவள்
விழிநீர் சிந்தும் வலிகளை!


கஞ்சிக்கு வழியின்றி -உம்
கட்டிலுக்கு வருபவள் தான்
கற்புக்கு பெயர்போன
கண்ணகி குலமடா அது!


காடயனாய் நீ மாறி-அவள்
கற்பை தின்று விட்டு
காசையும் வீசி விட்டு
வேசி எண்றும் ஏசி விட்டு ?
வேறு வீடு சொல்கின்றாயே!
வெட்கம் கெட்டவனே!


குருவியை போல் இரை தேடி,
கருவியை போல கட்டிலில் கிடந்தாள்
பசியென்ற நோய் போக்கவே...!
படுக்கையில் பிணமாய் கிடந்தவள்
பணமாய் தினமாய் உளைத்ததுவும்
பஞ்சப் பிணி போக்கதானே!


நிர்வாணத்தை நிரந்தரமாக்கி
அவள் வண்ண மேனியை
வரிகுதிரையாய் கீறியவரே
கேளீர் அவள் வலிகளை.


வசதியாய் சொல்லும்போது
விபச்சாரி, விலைமாது
நவீனமாய் மொழிகளில்
பாலியல் தொழிலாளி,
பட்டம் வசைபாடும்போது
வேசி, தேவடியாள்
வசதிகேற்றாற்போல் வைத்தீரே
வார்த்தையிலும்..படுக்கையிலும்!


விபச்சாரி என்று பெண்ணை காட்டும்
பெருச்சாளிகளுக்கு சொல்லுங்கள்.
பணத்திற்கு படுத்து எழுந்து
பசிதீர்த்துக் கொண்டவனும்
விபச்சாரிதானென்று,,,,!