Saturday, December 27, 2014

குற்றும் விழியழகி

உன் மந்தகார புன்னகையும்
மதி மயக்கும் விழிகளும்
என்னை கதிகலங்க செய்யுதடி!
மந்திரித்த சேவல் போல,
மயிலே உன்னழகை கண்டு-இந்த
மன்மதனும் மயங்கி விட்டேன்!


இனியொரு முறையேனும்,
ஏறெடுத்து பார்த்து விட்டாள்,
பார்வையாலே பரிதித்டுவாயோ
என் வாலிப வயதின் வயதின்
வம்பு தும்பனைத்தையும்...!


உன் விழிபார்வை கண்டே
என் உயிரும் ஊசலாடுதே!-மீதி
மூடி வைத்த அழகையும்
முன் நின்று பார்க்க நேர்ந்தால்-என்
உயிர் மூச்சும் நின்று போகுமோடி! 


ஆழ்கடல் தாண்டி செல்லும்
உன் அறியா பார்வையாலே!
அத்தனையும் செயலிழந்து
அடிமனது சொல்கின்றது-என்
அடிவானுக்கு சொந்தக்காரி,
நீயொருத்தி தானாம் என்று!

0 comments:

Post a Comment