Saturday, June 20, 2015

தனிமையின் சிறையில்,


சிரிக்க செய்த உன் சில்மிசங்களும்
சிந்திக்க செய்த சில கேள்விகளும்
நான் செய்த தவறுக்காய்
நீ என்னை திட்டிய நிமிடங்கள்
பிறகு என் மௌனம் கலந்த
கண்ணீரை கண்டவுடன்.-நீயே
என்னை சமாதான படுத்திய
நிமிடங்கள் அப்பொழுது என்னை
விட வேதனை பட்ட -உன்
முகமும்..மனமும்..,

பைத்தியம் பிடித்தாலும்.
பக்கத்தில் இருப்பேன்
பிரியவே மாட்டேன்.,எனும்
பிரியமான வார்த்தைகள்,
அனைத்துமின்று,,,!

முகிலாய் தோன்றி,
மேகமாய் படர்ந்து இறுதியில்
மழையாய் மண்ணோடு
மறைந்து போகும் என்று
யாரும் நினைக்கல்லையே!

அணுவணுவாய் ரசித்து
வாழ்ந்தேன் உன்னை -இன்று
அணுவளவும் நினையாமல்
வாழ்கின்றாய் நீ என்னை,

அக்காவிடம் சொல்லி வைத்தேன்
அந்தபுரத்தில் அவள் அல்லிப்பூ
அர்த்தசாமத்தில் மல்லிப்பூ-என்று
அத்தனையும் கானலாய்
மாற்றிடாதே பெண்ணே!

என் காதல்..,நான்
வார்த்தையாய் சொல்லித்தான்
உன்னை வந்தடைய
வேண்டும் என்றால்..,
அது என்னிடமே இருக்கட்டும்

ஆயிரம் அர்த்தம் சொல்லும்
உன் அழகிய விழிக்கு சொல்லு
அடங்கா வலியுடன் இவ் ஆண்மை
மெளணித்து இருகிறதென்று

அடிக்கும் தாயையே
அணைக்க ஓடும் குழந்தை போல
வெறுக்கும் உன்னையே
தேடி தினம் மனம் ஓடுது.

பாதை இது தான்..,
பயணமும் இது தான்..,
பதில் மட்டும் நீ சொல்..,
நான் - உன் வழிதுணையா?
இல்லை வாழ்க்கை துணையா?

0 comments:

Post a Comment