Thursday, May 28, 2015

நீ வரமா? சாபமா?

முத்து பல்லழகி
முந்திரியம் மூக்கழகி
மூன்றாம் பிறையழகி
தித்திக்கும் பெயரழகி
செந்தமிழ் சொல்லழகி
 சிந்தை செருகி நின்றேன்
சிங்காரி உன் இடையழகில்-இதில்
விந்தை என்னவெனில் நான் 
வீழ்ந்தது உன் அழகில்
 நின் நெற்றிபொட்டின்
அளவு கூட இடம் தர
மறுத்தாயடி இதயத்தில், 
அப்படி என்ன பாவம்
செய்தேன் உன்னை
காதலித்ததை விட.?
தொலைபேசி தொல்லையாக
உன் தொலைவே அதற்க்கு 
எல்லையாகியது
நிதமும் வேண்டுகிறேன்
நின்மதியை தேடுகின்றேன்
நீ வந்து சென்றதாளோ
நினைவிழந்து நிற்கின்றேன்-தினம்
நீளும் இரவினிலே நீ
இல்லா தனிமையிலே
நிலவும் நானும் இன்று
இழவு காத்த கிளி போலே 
இரவில் காத்து கிடக்கின்றோம்
சிலந்தி வலைக்குள்
சிக்கிய ஈ போல், -நான்
சிக்கி தவிக்கிறேன் 
வாழவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்......!

Friday, May 22, 2015

தேவையவள்

நித்தம் உந்தன் நினைவு-என்னை
சத்தம் இன்றிக் கொள்ளுதடி
யுத்தம் இன்றி காதல் கொள்ள
கத்துகொடு என் பவளக்கொடி


பல வருடம் தவமிருந்து
பாவையுனில் காதல் கொண்டேன்
பாசமுகம் கொண்டு நீ தான்
பறந்தோடி வருவாயோ?


நேசம் வைத்த உறவெல்லாம்
நெடுநாளாய் நிலைக்கல்லடி-நெஞ்சம்
எல்லாம் உன்னை வைத்தே
நிலைகுலைந்து போனேனடி


நேரம் வரும் காத்திரென்று
தேவதையே நீயும் சொன்னால்
தெய்வம் வந்து சொன்னாலும்
தேவை நீ மட்டுமே என்று
தேவாரம் பாடி நிற்பேன்,-என்
தேவதையே நீ சொல்லி விடு,,,
!

Wednesday, May 6, 2015

தாங்குமா நெஞ்சம்.

கண்ணிமைக்கும் நொடியில்
கரைகடந்து செல்வேன், -நின்
வன் செயல் கண்டு இன்று
நிலை மறந்து போனேன்,

வதைக்கும் எண்ணம்
வேண்டாம் , தாங்காது
என் மனது தேங்கிய
நினைவு பல தூங்கினாலும்
தூங்குவதில்லை அவை

பத்தோடு பதினொன்றாய்
பாவையுனை பார்த்திருந்தால்
பாவாடை தாவணிபல
என் பள்ளியறையில்
கண்டிருப்பேண்டி!

சீதையாய் நீ இருப்பாய்
ராமனாய் நான் இருக்கவே
இரவுபகல் தவமிருக்கேன்!
பிஞ்சு நெஞ்சமடியிது-விச
நஞ்சை தூவாதே புள்ள நீ

துரோகம் எனும் துயர் தாங்க
துளியளவும் துணிவில்லை,
தூயவளாய் நீ இருந்து விடு
துன்பத்தில் எனை தள்ளிடாதே!

ஏமாற்றமும் தடுமாற்றமும்
எல்லோருக்கும் புதிதல்ல
ஏற்றிடும் எண்ணமும்
நோக்கிடும் பார்வையுமே
நாளைய வாழ்வின் படிகளடி

கன்னியாய் நீ இல்லையெனிலும்
கணவனாய் நான் இருப்பேனடி
கல் நெஞ்சக்காரி நீயும்-
என்னை
கலங்கடித்து விடாதே பெண்ணே,,,!

Sunday, May 3, 2015

ஒரு தாய் புலம்பல்

பத்து வயதில்,
பருவம் அடைந்த கிளி
பாசம் வேஷம்,
அறியாமல் சென்றதெங்கே?


பிச்சை புகினும்
கற்கை நன்றென்று
மாடாய் உழைத்து
மல்லிகையும் விற்று
பல்கழையில் படித்தவள்


காம வலைவிரித்த -அக்
காடயன் கையில் சிக்கி
சீரழிவாய் என்று கனவிலும்
நினைக்கல்லையே! தாயி


அப்பன் இல்லா திமிரா?
அண்ணன் இல்லா உணர்வா?
காலத்தின் கட்டாயமா?
வயதின் வளர்ச்சியா?
வரம்பு மீறிய உணர்ச்சியா?


என்னவென்று சொல்லியழ
தாய்மடி மறந்திவளும்
மன்மத மடிதேடி சென்று
பஞ்சனையில் என் புள்ள
பாழான கதையை!


கண்பார்த்து காதல் கொண்டு
கைபிடித்து வாழ்ந்திருந்தால்
வாழ்த்துரைத்து சென்றிருப்பேனே!


தொடையிடையில் காமம் கொண்டு
கயவனோடு கட்டில் சென்று-இன்று
கண்ணீரில் தவள்கின்றாளே!
என் சொல்லி தேற்றிடுவேன்
என் தவப்புதள்வியை,,,,,,,,,,,,!

Saturday, May 2, 2015

பணம்தானோடி நின் காதல்!

புத்தக இடுக்கில் புகைப்படம்
மறைத்து வைத்து ரசித்த
காதலர்களோடு அழிந்து
போனது உண்மைக் காதல்!


தாய்மையின் தாற்பரியம்
தங்ககத்திற்கு ஈடாகுமோடி?
காதலன் கண்ணசைவுகளை
காமம் என்று உணரலாமோடி?


எங்கிருந்து வந்தாயடி
என்னவளே நீயும்? -இன்று
எடுத்தெறிந்து போறேண்டி..
உன் எளிய குணத்தால் நானும்.

பணத்தை காட்டி கல்யாணம்
கட்டுவதில் என்னடி பயன்???
சி.. சி..பிணத்தை கட்டுவதற்கு
ஒப்பாகுமே அவ் நொடிகள்


வெளிச்சத்தை கடன்
வாங்கிய நிலவு...! இரவுக்காக
காத்திருப்பதில்லை என்பதை
உணர வைத்தாயடி பெண்ணே ...!
வெளிநாட்டு மாப்பிள்ளையின்
மணிகிரேம் பார்த்தவுடன்,,,!


நான் நானாய் இருக்கும்
வரையிலும் நீ செய்பவை
எல்லாம் சரியே!
எப்பொழுதும் ஏற்படும் ஐயம்
நான் நானாய் இல்லையெனும்
போது என்ன
நடக்கும் என்பதே ??????

தொழிலாளர் தினம்{01-05-2015}

அம்மா பசிக்குதென்று
பத்து தெரு தட்தேந்தாமல்
பிறர் குப்பைதெரு கூட்டி
உண்ணும் தொழிலாளியே!


உன் குழந்தைப்பருவ
நினைவும் சொல்லுமோ
அப்பன் செய்யும் தொழில்
தெய்வம் என்றதையே!!!!


பிச்சு தின்னும் மனிதனை விட
பிறருக்கு வித்தை காட்டி
உண்ணும் குரங்காயிருந்திடு
எல்லாம் முன் கைவந்திடும்


இங்கே பிணத்தை கூட
பணமாய் மாற்றும் மனிதம்
அதிலே நீ மரித்தும் இனிமேல்
இல்லையடா ஒரு புனிதம்


தொழிலாளி தொலைவாகி
நடுத்தெருவாகி நில்லாமல்
நாளை என்றும் நமதாகி வாழ
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்,

முறிந்தது முழுதும்

கண்மூடி முகம் புதைத்தேன்
கனவிலே உன் முகம்,
காலை கண்விழிக்கையில்
கணனியிளும் உன் முகம்,


எங்கே போவேன் -என்னவள்
நினைவில்லா தேசம் தேடி?
உன்னழகே புன்னகை என்றாய்
பறிபோனது புன்னகையும்,
பரவசமாய் பார்க்கின்றாய் என்றாய்,
பாழானது பார்வையும்,


தேவையற்ற வாதங்களும்
மூட நம்பிக்கைகளும்
முட்டாளாக்கியதே முழுமதி
நம் காதலை,


பிடிக்காதா செயலுக்காய்
போடும் சண்டைகள்,
பிடித்தவருடன் மட்டுமே
முடியும் என்று புரியல்லையே
புள்ள ஏன் இன்னும் உனக்கு,,,,!


பிடிக்கும் சண்டை எல்லாம்
பிரிவுக்கு மட்டுமென்றால்
உலகம் உருளுவதில்
உள்ளதோடி பயன் ஏதும்,,,,,,,,,?


உணர்ந்துகொள் உண்மையை
உயிர் பிரிந்த பின் உடலிருந்து
பயன் ஏதும் இல்லை,