Friday, May 22, 2015

தேவையவள்

நித்தம் உந்தன் நினைவு-என்னை
சத்தம் இன்றிக் கொள்ளுதடி
யுத்தம் இன்றி காதல் கொள்ள
கத்துகொடு என் பவளக்கொடி


பல வருடம் தவமிருந்து
பாவையுனில் காதல் கொண்டேன்
பாசமுகம் கொண்டு நீ தான்
பறந்தோடி வருவாயோ?


நேசம் வைத்த உறவெல்லாம்
நெடுநாளாய் நிலைக்கல்லடி-நெஞ்சம்
எல்லாம் உன்னை வைத்தே
நிலைகுலைந்து போனேனடி


நேரம் வரும் காத்திரென்று
தேவதையே நீயும் சொன்னால்
தெய்வம் வந்து சொன்னாலும்
தேவை நீ மட்டுமே என்று
தேவாரம் பாடி நிற்பேன்,-என்
தேவதையே நீ சொல்லி விடு,,,
!

0 comments:

Post a Comment