Saturday, May 2, 2015

பணம்தானோடி நின் காதல்!

புத்தக இடுக்கில் புகைப்படம்
மறைத்து வைத்து ரசித்த
காதலர்களோடு அழிந்து
போனது உண்மைக் காதல்!


தாய்மையின் தாற்பரியம்
தங்ககத்திற்கு ஈடாகுமோடி?
காதலன் கண்ணசைவுகளை
காமம் என்று உணரலாமோடி?


எங்கிருந்து வந்தாயடி
என்னவளே நீயும்? -இன்று
எடுத்தெறிந்து போறேண்டி..
உன் எளிய குணத்தால் நானும்.

பணத்தை காட்டி கல்யாணம்
கட்டுவதில் என்னடி பயன்???
சி.. சி..பிணத்தை கட்டுவதற்கு
ஒப்பாகுமே அவ் நொடிகள்


வெளிச்சத்தை கடன்
வாங்கிய நிலவு...! இரவுக்காக
காத்திருப்பதில்லை என்பதை
உணர வைத்தாயடி பெண்ணே ...!
வெளிநாட்டு மாப்பிள்ளையின்
மணிகிரேம் பார்த்தவுடன்,,,!


நான் நானாய் இருக்கும்
வரையிலும் நீ செய்பவை
எல்லாம் சரியே!
எப்பொழுதும் ஏற்படும் ஐயம்
நான் நானாய் இல்லையெனும்
போது என்ன
நடக்கும் என்பதே ??????

0 comments:

Post a Comment