Saturday, May 2, 2015

தொழிலாளர் தினம்{01-05-2015}

அம்மா பசிக்குதென்று
பத்து தெரு தட்தேந்தாமல்
பிறர் குப்பைதெரு கூட்டி
உண்ணும் தொழிலாளியே!


உன் குழந்தைப்பருவ
நினைவும் சொல்லுமோ
அப்பன் செய்யும் தொழில்
தெய்வம் என்றதையே!!!!


பிச்சு தின்னும் மனிதனை விட
பிறருக்கு வித்தை காட்டி
உண்ணும் குரங்காயிருந்திடு
எல்லாம் முன் கைவந்திடும்


இங்கே பிணத்தை கூட
பணமாய் மாற்றும் மனிதம்
அதிலே நீ மரித்தும் இனிமேல்
இல்லையடா ஒரு புனிதம்


தொழிலாளி தொலைவாகி
நடுத்தெருவாகி நில்லாமல்
நாளை என்றும் நமதாகி வாழ
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்,

0 comments:

Post a Comment