Sunday, May 3, 2015

ஒரு தாய் புலம்பல்

பத்து வயதில்,
பருவம் அடைந்த கிளி
பாசம் வேஷம்,
அறியாமல் சென்றதெங்கே?


பிச்சை புகினும்
கற்கை நன்றென்று
மாடாய் உழைத்து
மல்லிகையும் விற்று
பல்கழையில் படித்தவள்


காம வலைவிரித்த -அக்
காடயன் கையில் சிக்கி
சீரழிவாய் என்று கனவிலும்
நினைக்கல்லையே! தாயி


அப்பன் இல்லா திமிரா?
அண்ணன் இல்லா உணர்வா?
காலத்தின் கட்டாயமா?
வயதின் வளர்ச்சியா?
வரம்பு மீறிய உணர்ச்சியா?


என்னவென்று சொல்லியழ
தாய்மடி மறந்திவளும்
மன்மத மடிதேடி சென்று
பஞ்சனையில் என் புள்ள
பாழான கதையை!


கண்பார்த்து காதல் கொண்டு
கைபிடித்து வாழ்ந்திருந்தால்
வாழ்த்துரைத்து சென்றிருப்பேனே!


தொடையிடையில் காமம் கொண்டு
கயவனோடு கட்டில் சென்று-இன்று
கண்ணீரில் தவள்கின்றாளே!
என் சொல்லி தேற்றிடுவேன்
என் தவப்புதள்வியை,,,,,,,,,,,,!

0 comments:

Post a Comment