Wednesday, May 6, 2015

தாங்குமா நெஞ்சம்.

கண்ணிமைக்கும் நொடியில்
கரைகடந்து செல்வேன், -நின்
வன் செயல் கண்டு இன்று
நிலை மறந்து போனேன்,

வதைக்கும் எண்ணம்
வேண்டாம் , தாங்காது
என் மனது தேங்கிய
நினைவு பல தூங்கினாலும்
தூங்குவதில்லை அவை

பத்தோடு பதினொன்றாய்
பாவையுனை பார்த்திருந்தால்
பாவாடை தாவணிபல
என் பள்ளியறையில்
கண்டிருப்பேண்டி!

சீதையாய் நீ இருப்பாய்
ராமனாய் நான் இருக்கவே
இரவுபகல் தவமிருக்கேன்!
பிஞ்சு நெஞ்சமடியிது-விச
நஞ்சை தூவாதே புள்ள நீ

துரோகம் எனும் துயர் தாங்க
துளியளவும் துணிவில்லை,
தூயவளாய் நீ இருந்து விடு
துன்பத்தில் எனை தள்ளிடாதே!

ஏமாற்றமும் தடுமாற்றமும்
எல்லோருக்கும் புதிதல்ல
ஏற்றிடும் எண்ணமும்
நோக்கிடும் பார்வையுமே
நாளைய வாழ்வின் படிகளடி

கன்னியாய் நீ இல்லையெனிலும்
கணவனாய் நான் இருப்பேனடி
கல் நெஞ்சக்காரி நீயும்-
என்னை
கலங்கடித்து விடாதே பெண்ணே,,,!

0 comments:

Post a Comment