Thursday, May 28, 2015

நீ வரமா? சாபமா?

முத்து பல்லழகி
முந்திரியம் மூக்கழகி
மூன்றாம் பிறையழகி
தித்திக்கும் பெயரழகி
செந்தமிழ் சொல்லழகி
 சிந்தை செருகி நின்றேன்
சிங்காரி உன் இடையழகில்-இதில்
விந்தை என்னவெனில் நான் 
வீழ்ந்தது உன் அழகில்
 நின் நெற்றிபொட்டின்
அளவு கூட இடம் தர
மறுத்தாயடி இதயத்தில், 
அப்படி என்ன பாவம்
செய்தேன் உன்னை
காதலித்ததை விட.?
தொலைபேசி தொல்லையாக
உன் தொலைவே அதற்க்கு 
எல்லையாகியது
நிதமும் வேண்டுகிறேன்
நின்மதியை தேடுகின்றேன்
நீ வந்து சென்றதாளோ
நினைவிழந்து நிற்கின்றேன்-தினம்
நீளும் இரவினிலே நீ
இல்லா தனிமையிலே
நிலவும் நானும் இன்று
இழவு காத்த கிளி போலே 
இரவில் காத்து கிடக்கின்றோம்
சிலந்தி வலைக்குள்
சிக்கிய ஈ போல், -நான்
சிக்கி தவிக்கிறேன் 
வாழவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்......!

0 comments:

Post a Comment