Monday, December 1, 2014

ஏதடா இன்பம்!

பெண்மையின்,
மென்மை கண்டு
மயங்கி நிற்கும் மடையரே!
அதிலும் உண்டு
முற்கள் என்று
அறியதிருப்பதேனோ நீரும்!


சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை
நம்பாதேயென்று,
பேரறிவாளன் சொன்னதுவும்
உம் செவிகளுக்கு,
எட்டவில்லையோ?


எத்தனை துன்பங்கள்
அதிலேது இன்பங்கள்
பெண்மையிலும் உண்டோடா!
ஒரு நாள் இன்பமும்
மறுநாள் துன்பமும்
துரத்தியே கொள்ளுமடா!


பேரின்பம் பெரும் துன்பம்
பெண்களிடம் உள்ளதடா!
பேதையாய் நீ இருந்தும்
பெற்றவளுக்கு ஏதுவடா?
பெரிதாய் ஒரு இன்பம்!


பத்து மாதம் சுமந்து வந்து,
பகலிரவாய் பசி கிடந்தது,
பால் ஊட்டி வளர்த்து விட
பால்மணம் மாற முன்னே,
பாச முகம் மறந்துதானே -அந்த
பாவாடை பின்னே சென்று,
பாதியிலே உயிரை விடுறாய்.


வேணாம்டா இந்த இழவு,
விட்டு விடு அந்த துளைவை,
இல்லையேல் விழுந்துவிடும்,
நம் வீட்டிலும் ஒரு இழவு!

0 comments:

Post a Comment