Friday, November 28, 2014

மனதில் நிற்கும் மாவீரரே!

புழுதி பறக்க பாய்ந்து வரும்,
கொம்பு சீவிய முரட்டு காளைகளை
மார் நிமித்து எதிர்த்து நிற்கும்
சிறுத்தை என் தமிழன் ..!!


வங்காளக் கடலும் ,
இந்தியப் பெருங் கடலும்-என்
வீட்டுப் பெண்களின் மீன் பிடிக்கும்
ஏரிகள் தான் என்றும்
நாம் எதிரிக்கும் புலிகள் தான்!


காற்றாகிக் கரும்புலிகளாய்
வெடித்துச்சிதறினீர்கள்!
கடலோடு கடலாகி
நீராகிப்போயினீர்கள்!
பட்டினியால் வாடி
வதங்கிப்போயினீர்கள்!
எதிரியின் பிடியில்

 நசுங்கிப்போயினீர்கள்

தேகத்தை திரியாக்கி
தியாகத் தீபமேற்றினீர்
இன்று எம் தேசமே
நாசமானதே தோழர்களே !!!  


மலைமலையாய்த்
தமிழர்களின் பிணங்கள் -ஈழ
மண்ணெங்கும் குவிந்ததன்று
தடுப்பார் யாரும் இல்லையே அங்கே!


கண்மணிகளே..!
கல்லறை வந்து
உமைக்கட்டித்தழுவி-எங்கள்
கவலைகள் சொல்லி
கண்ணீர் வடிக்க
தவிக்கிறது மனசு...


என்ன நடக்கிறது
எங்கள் தேசத்தில் இன்று?
எவனுக்குமே விளங்கவில்லை..!
புதைபட்டு மண்ணுள் புழுவாகி
போனான் தமிழன் என்று யார் சொன்னது?


வீட்டுக்கொன்றாய் விதையைக்கேட்டு
நாட்டுக்காக நட்டடு வைத்து!
கல்லறைக்குள் துயிலும்
கண்மணிகளே உமக்குத்தெரியும்.!
காற்றோடு கலந்திருக்கும்
கருவேங்கைகளுக்குத்தெரியும்.!


புதைபட்டுப் போகவில்லை-
தமிழன் அங்கே!
புதுநாடு பிறப்பெடுக்க! -
பூமிக் குள்ளே,!
விதையாகிப் போயுள்ளான் !

 

0 comments:

Post a Comment