Saturday, November 15, 2014

முழு பெயருடன் முதல்வரி வாழ்த்து!

(இ)-இல்லறம் சிறக்கவென்று
இனிதாய் வரம் வேண்டி 
சேகர்+சுகந்தி தம்பதிகள்
இனிய மணம் முடித்தவேளை!


(ரா)-ராத்திரிக்கு நாயகியாய்
ஆண் மயிலின் அழகுடனே
பெண் மயில் நீ பிறந்தாய்
பெற்றோர் மனம் மகிழ!


(ச)-சகானா என்று பெயர் சூட்டிட 
சுட்டி தனம் நீ காட்டிட 
உன் குட்டிக் குறும்பனைத்தையும்
கட்டி காத்து காவல் நின்றனரே!
 உன் தாய் தந்தையரே!


(சே)-சேற்றை வாரி நீ பூச
சேர்ந்தே தாமும் பூசிவிட்டு
செல்ல மகள் நீ மகிழ
சேர்ந்தே தாமும் சிரித்தனரே!
வஞ்சம் இல்லா நெஞ்சதோரடி
உனக்காய் வாழும் பெற்றோர்கள்!


(க)-கண்டிக்கும் வேளையிலும்
சுதந்திர காற்றாய் பறக்க விட்டு
சுற்றித்திரிந்து நீ வந்த போதும்-அன்பால்
அள்ளி அணைத்து கொண்டவர்கள்
உன் அன்னை தந்தையரே!


(ர்)-ர்ர்ரர்ர்ர் என்ற ஓசையுடன்
ரீங்காரம் பாடிவரும்-சில்
வண்டுகளும் வியந்து நிற்குமே
வாச மலர் ஒன்றுக்கு இன்று
பிறந்தநாள் என்றறிந்தால்! 


(ச)-சலசல என்ற நீர் வீழ்ச்சியின்
சத்தங்கள் ஓய்ந்தாலும்
கன்னத்தில் குழிவிழவே
கட்டழகி நீ சிரிக்கும் கலகலப்பு
தீராதே என்றும் உன் வீட்டில்! 


(கா)-காதலை விட்டெறிந்து
காவியம் தொட்டபோது நட்பென்ற
சொல்லுக்கு நாமிருவர் தான் என்று
நாடும் போற்றும் உறவு கொண்ட
நல்லுள்ளம் நீயடி தோழி!-உன்னை
நலம் வாழ வாழ்த்துகிறேன் நானும்! 


(னா)-னாவென்ற எழுத்துக்கு மணமுடிக்க
மாப்பிள்ளை தேடுவது போல-நாள்
முழுக்க சொல் தேடினேன் தோழி!
சிக்கிய எழுத்துகளையும்
சிக்காத சொற்களையும் கொண்டு
சிறு கவி நான் வடித்தேன் -தோழி
நீ உதித்த நாளுக்கு வாழ்த்துரைக்க!


உன் குறும்புச் சிரிப்புடனும்
குதூகலப் பார்வையுடனும் நட்பே -நீ
நலம் வாழ வாழ்த்துகின்றேன் நானும்!

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
"இராசசேகர் சகானா!"
 

0 comments:

Post a Comment