மண்ணின் மடியில்
தலைசாய்க்க ஆசை!
மலருடன் மனம்விட்டு
கதைபேச ஆசை!
நெஞ்சை நொருக்கும்
கொடிய இடியுடன்
கொஞ்சிக் குலாவி
கொலுபோக ஆசை!
மின்னல் பிடித்து
வான் ஏற ஆசை!
ஜன்னல் வழியே
மழைகாண ஆசை!
குடையின்றி சாலையில்
நெடுநேரம் நனைந்து
நடைபோட எனக்கு
நெடுநாளாய் ஆசை!
பௌர்ணமி நிலவில்
கடல் காண ஆசை!
பகல்விரிக்கும் இரவின்
உடல் காண ஆசை!
தலைகோதும் என்னவளின்
மடிசாய்ந்து நானும்
சிலையாகிப் போயிடவே
பிடிவாத ஆசை!
உங்கள் ஆசையும் என் ஆசையோடு கைகோர்த்து நடந்து போவது போல் இருக்கிறது :-)
ReplyDeleteஅஹ அஹ அப்படியா நண்பா ஹ ஹ மகிழ்ச்சி பா நன்றிகள்
Delete