Saturday, November 1, 2014

தாய்(நாட்டை)பிரிந்து!


உன் வயித்துல
என் முட்டி மடங்குமுன்னே
முக்காணியில பணம் சேத்தவளே!
உன் வயிறு கனக்கும் முன்னே
ஊர் கனைக்க பேரு வச்சவளே!
தொப்புள்க்கொடி வளருமுன்னே
எனக்கு தங்கத்துல கொடி புடிச்சவளே !


தூங்கிய ஊரை கதறி நீ எழுப்ப
கதறி விழுந்த என்ன பார்த்து
ஆனந்த கண்ணீர் விட்டு நீ அழ!
நான் அழ நீ சிரிச்ச அந்த பொழுதும்
மறக்குமா உன் வாழ்வினில் அம்மா!
சாமத்துல நான் கதற தாயே
உன் மடி சுரந்து உறங்கவச்ச!


புள்ளி மான போல கருப்பு புள்ளி வச்சி
முத்தத்தில தவள விட்ட !
மயிலிறகு கொண்ட கட்டி மல்லிகப்பூ
வச்ச வாசம் என் மூச்சுக்குள்ள நிக்குதடி!
பச்ச நிற மேல்சட்டை பவளநிற கால்சட்டை
எட்டி உதச்ச எனக்கு ஏர்பூட்டி நீ விட்ட!


மூத்த மகன் என்னோடு
முத்தாய் மூணு பெத்தெடுத்த
அதுல ஒன்னு உன் ஜாதி,


உன் உதட்டு சாயமெல்லாம்
என் நெத்தியில நீ வச்ச பொட்டுதானே!
உன் விரலால வச்ச மைய
மல்லிகபூ முத்தமிட்டு நீ அழிச்சியே அம்மா!


அம்மா என்னை பட்டுல படுக்கவச்சி
பட்டுன்னு கூப்டுவதும் சிட்டுன்னு கூப்டுவதும்
இன்னமும் இந்த செவி சவ்வ கிழிக்குதடி!
தாயை விட்டு தாய் மண்ணை விட்டு
தாய்லாந்து வந்து வருடம் இரண்டும் ஆனதே
வழியும் இன்றி வலியும் தொடர்ந்ததே


பார்த்தவரெல்லாம் காத்திரு என்றுரைக்க
காத்திருந்தவர் எல்லாம்
கடல் கடந்து சென்றனரே
அம்மா உன்னை காணமல்
அன்புதனை அறியாமல்
அலைமொதுகின்றதே என் உள்ளமும்


என்று அந்த நாள் என்று
எத்தனை நாள் காத்திருப்பது நானும்
வரிவரியாய் வலிபடிதேன்
இருந்தும் வளருகின்றதே
தாய் (நாட்டை)பிரிந்த
பிரிந்த வலிகள் என்னுள்!

2 comments:

  1. முத்து முத்தான வரிகள்..
    ஏனோ முள்ளாய் குத்தும் வலிகள்...

    ReplyDelete
  2. அஹ மகிழ்ச்சிகள் சகோ மிக்க நன்றிகள்

    ReplyDelete