Sunday, November 2, 2014

சுட்டது சுடு சொல்!

அன்பைத் தேடி அலைவதனால்
உன்னுள் அன்பும்,
அடக்கமும், பாசமும், பண்பும்
இன்பமும், இனிமையும்
இனிதாய் வந்து தங்கும்


அதிகாரம் தேடி,
சதிகாரனாகி
சாதிக்கப் போவது என்ன ?
விதியே என்று நீயும்,
வீணாகத் தனிமைப் படுத்தப் படுவாய்
வீதியோரத்தில்...


அன்பைக் கொடுத்து விடு
அறிவைத் தந்து, பிறரை
ஆதரிக்கக் கற்று விடு
விதியை வென்று நீ
விண்ணை எட்டிடலாம்.


பிறரைச் சாடி
வதை மொழி பேசுவதால்
மிஞ்சுவதெல்லாம் உனக்கு.


பேயனென்ற பேச்சுத் தான்
நாயே என்றுன்னை
நாலுபேர் தள்ளி வைத்தால்
நீ போய் தனிமையில்
மெளனியாய் அஞ்சாதவாசம் தானே!


வேண்டாம்...வேண்டாம்
விட்டு விடு விவாதிப்பதை.
ஏற்றிடு பிறர் கருத்தை.
அது உனக்குச் சாதகமில்லை
என்றாலும்
சார்ந்து விடு அவர் பக்கம்
சாதிக்கலாம் நீ நிறையவே!

0 comments:

Post a Comment