Sunday, November 9, 2014

கட்டழகியில்லா தனிமை!

நீர்  கொண்டு விழி தீட்டி!
நிலம் கொண்டு உடல் தீட்டி!
தீ கொண்டு உன் கோபம் தீட்டி!
வரலாறு கானா உன் புன்னகையை
வான் கொண்டு தீட்டி!
கட்டழகி உன் இடை வளைக்க
காற்றையும் கடன் வங்கினானே
கயவன் அவன் பிரம்மனும்!


பஞ்ச பூதத்தையும் பஞ்சாய் சுருக்கி
பைங்கிளியே உன்னை வடிவமைத்தானே
வஞ்சம் இல்லா நெஞ்சத்தான் போல
உன்னை வடிவமைத்த பிரம்மனும்


உன் கன்னத்தில் குழி விழுத்தி
என் காதோரம் சிரிபொலி விழுத்தி
காதல் என்ற வலை விரித்து-ஏன்
கவிழ்த்தாயடி காதலியே என்னை நீ !


காமம் என்ற உலகினிலே
காதல் என்ற போர்வை போர்த்தி
நகர்கின்றதே பலர் வாழ்வும்!
சிறகடிக்கும் மனதுக்கும் சிந்தயடக்க
வழி இன்றி தவிக்கின்றதே என் வாழ்வும்!


உடையளவு இடையளவு
அத்தனையும் வினாவி விட்டேன்
உலகளவில் கிடைக்கா உன்
உடல் அழகை அறிய
ஆண்டு பல காத்திரு என்று
அவகாசம் சொல்லி விட்டாயே!


நினைவெல்லாம் நீயாக
நியமெல்லாம் நினைவாக
நியமான உன் நினைவை
நினைத்தே கழிகிறது
நீ இல்லா என் வாழ்கை


தனிமை இரவில் உறங்கா நினைவில்
காதலி நீ வருவாய் கனவாக!
அது முடியும் பொழுதில்
விடியும் பகலில் தினம் நீ இருப்பாய்
என் கவியாக!

0 comments:

Post a Comment