Monday, November 23, 2015

இது இப்படியுமா?

இன்றைய பொழுது
இயந்திரமாய் உழைத்து
இனியவள் இதயத்தை 

களவாடி விட்டேன்
இனியொரு இன்பம்
இதை விட கிடையாது

கண்கள் நான்கும்
நேர்கோட்டில் நிற்க
சந்திர கிரகணங்கள்
சில நிகழ்ந்தேறின
முத்த மலை -இலங்கை
யுத்தம் போல்
நிகழ்ந்தேறியது


அன்றலர்ந்த மலராய் அவள்
அங்கங்கள் சிவந்து நிற்க
தென்றலாய் வருடி அணைத்து
இதழ்கள் இணைத்தேன்


இன்னும் என்னை அணைத்துக்கொள்
இறுக்கம் என் உடலில் எதோ
சிற்சில அறிவியல் மாற்றத்தை
உண்டாக்குகிறது என்றாய்!


வான்மகளின் முகம்
சிவந்த வெட்கம்,
சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,
என அத்தனை
அழகையும் அழகிய
உன் உருவில்
உணரும் பொழுதில்


உன் அழைப்பில் சிணுங்கிய
என் அலைபேசி கலைத்தது
என் இன்றைய பகல் கனவினை,,,!

வலி(ரி)யின் உ(எ)ச்சம்,!

முகாரிகளினாலும் பாடமுடியாத
உறைபனியின் முகடுகளிலும் 
கரையாத எம் வலியின் 
உணர்வுகளைமுக்காடு
போட்டு மறைத்துக்கொள்ள
முயன்ற போதும் பொத்துக்
கொண்டு வெளிவருகின்றது.

சப்தமின்றி மனதுக்குள்
சத்தியங்கள் செய்திட்ட
போதிலும் நடந்து வந்த
பாதையை மறக்க -மனம்
ஏனோ தயங்குகின்றது!.

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து விட்டு போகின்றாய் நீ!
ஊமைக் குயிலடி நான்-இன்று
உள்ளுக்குள் அழுகிறேன்
உன்னால்! -உன் ஓரிரு
வார்த்தைளோ மெல்ல
மெல்ல கொல்லுதடி!

மனித மனங்களும்
மரித்து போய் விட்டது
இறைவனோ கண்ணீரைப்
பரிசாக தந்து விட்டு -இன்னும்
மௌனம் காக்கின்றான்!

எத்தனை முறை -நம்
காதலை கொடுத்த
இறைவனுக்கு நன்றி
சொல்லியிருப்போம்...?

இன்று நம்மைப் பிரித்து
நன்றிக்கடன் செலுத்தும்
இறைவனுக்கு காதலின்
வலி தெரியுமா....?

நன்றாகத் தானடி இருந்தாய் -
என்ன ஆயிற்று உனக்கு...?

நேற்று இருந்த நீ!

இன்று இல்லை...,

என்ன ஆயிற்று...?

பதில் சொல்...?

வேண்டாமடி இந்த
மெளண மொழி!

உனக்கும் காதல் வரும்
தருணம் நான் உணர்த்த கூடும்
என் மெளண மொழி......!
வலியில் துடிதுடித்தே
இறந்து விடுவாய் நீ!

வேண்டாம்!

வேண்டாம்!

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன்
பெயர் அப்போதாவது
நீ என்னைக் காதலி -அவ்வேளை
மோட்சம் பெறட்டுமென்
காதல்,,

நின் நினைவு

தூரத்தில் இருக்கின்றேன்
துயரத்தில் தான் இருக்கின்றேன்
தூக்கம் இன்றி இருக்கன்
துணையுமின்றி தான் இருக்கன்

துன்பங்கள் என்னை சூழ்ந்த வேலை
தூக்கிவிடவும் எவரும் இல்லை
துயர் பகிர வரவும் இல்லை

தூர தேசம் சென்றதாலோ
தூக்கியெறியும் உறவுகளால்
துனையென்று வந்தவளுக்கு
இணை யாரும் இல்லை என்றேன்.

உனக்கு ஈடு நான் இல்லை 

என்று இடையில் அவள் 
செல்வாள் என்றறியாமல்....!

நீ இன்றி போன நிலையில்
நிரந்தரமாய் நானும் தூங்கி விட்டால்
நீ தந்த காதல் ஒன்றே
நீடூளி வாழ்ந்திடும் என்னுள்

நினைவின் ரணங்கள்.


நட்பெனும் வட்டத்தில் -என் 
வாழ்வு நகைச்சுவையாய் 
செல்கையிலே-நன்மை 
தரும் தரு வென என் வாழ்வில்
நிழலாக வந்தவளே!

இருவரது இறுக்கத்தை
அதிகப்படுத்தும்
அல்லது குறைக்கும்
நம் மௌனங்கள்
கண்ணீரிலா! முடிய வேண்டும்?

நீ பற்றியஞாபகங்கள்
நொந்துபோன மனசின்
பரப்புகளில் அர்த்தமில்லாத
அவஸ்தைகளாய் கனக்கின்றன

ஒரே ஒரு கேள்வி
அகால மரணமாய்
திடீரெனச் செத்துப்போனதே,
நம் உறவு! எப்படி நேர்ந்தது
அது?

இந்த கிறுக்கனின்
கிறுக்கல்கள் கூட
உன் இதயத்தில்
என் பெயரை
கிறுக்கவில்லையா?

வேண்டாம் நான்
ஒன்றும் உன்னிடம் கேட்டு
உன்னை துன்புறுத்தவில்லை

மனதை தொட்டு சொல்
உனக்கு என்மேல்
ஒரு நொடியேனும்
மெய்க்காதல்
வரவில்லையா???

மயான வழி{லி}

பேச்சுகளில் உன் பெயரை
உச்சரிக்க வைத்தாய்
என் பெயர் அருகில் உன் பெயர்

எழுத ஒரு தடவையேனும் -உன்
விரல்கள் முனையவில்லையா??

நீ வரும் நேரங்களுக்கு முன்
என்னை வரவழைத்தாய்
ஏன்? எனக்காய் நீ
ஒரு தடவையேனும் காத்திருக்க
வில்லையா....?

சொல்லிச்செல்.....!
என்னை கிறுக்கன்
என்றுரைக்கும் -இவ்
உலகறியட்டும். உண்மை
காதல் உன்னிடம் உள்ள செய்தியை....!

நீளும்....
இரவின் அமைதி
இதுவரையிலான உன்
மெளனத்திற்கு ஒரு குரல்
கொடுக்கிறது,,,,,!

அது நான்
நினைப்பவைகளையே
இன்றுவரை பேசுகிறது.!!
ஏனோ நீ மட்டும்
இன்றுவரை பேசாமலே
இருக்கின்றாய்...?

துரத்தும் உன் நினைவுகளை
துயர் பகிரும் உறவுகளால்
துரத்தி அடித்திட்டு சில கெட்ட
நினைவுகளையும் உனக்கு
கொடுக்க விரும்புகிறேன்,

பின் ஒரு நாள்..,
என் பிணத்தின் அருகில் -நீ
அழுதுகொண்டிருக்கும் போது
அவை சில நிமிடங்கள் -உன்
அழுகையை நிறுத்தி வைக்க
கூடும் என்ற நம்பிக்கையில்!!
!

மனதில் நீயாக..!

மண்ணில் இன்பமெல்லாம்
மங்கையால் வந்ததென்று
பாவையே உன் பிரிவினிலே
பாவி நான் உணர்கின்றேன்,

பணமும் பந்தமும் இன்று
பகையாய் தோணுதே -என்
படுக்கை விரிப்புகள் கூட
இடுக்கண் கூட்டுது.,,,,,,,,,,,.!

குடலை எரிக்கும் மதுவைக்
குடித்து உடலின் வனப்பை
இழக்கவா? இல்லை
வரவுக்கு மேலே செலவுகள்
செய்து உறவுகள் எல்லாம்
துறக்கவா,,,,,,,,?

மைவிழி மாதர்
மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்து
தெருவுக்கு வந்தபின்
எப்படி இருந்த நான் இப்படி
ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில்
ஏதும் பயனில்லை என்றே!

கடல் கடந்து இருந்தாலும்-என்
கனவெல்லாம் நீயாக!
நின்மதியை துளைத்தாலும்
நினைவிலும் நீயாக,,,,
தையலே உன்னை மட்டும்
எண்ணியே வாடுகின்றேன்..........!

கொடூரக் கவிதைகள்


அதிகார அவஸ்தையில்
சில்லுக்குள்
சிக்குண்ட சில் 
வண்டுகளாய்,,,,!

பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய் -தாய்
மண் வாசனையை
தேடித் தேடி உயிர் கருகும்
பட்டாம் பூச்சிகளாய்..!

வழிந்தோடிய
இரத்த ஆறுகளை
வழி மறித்து
நின்ற
எலும்புக் கூடுகளை
நினைத்து

தேடலின்
கடைசி நுனியில்
அமர்ந்தபடி
திக்கற்றுத் தவிக்கும்
வாலிப மனங்களில்

இன்னும்
கண்ணீரில் தவிக்கும்
எல்லா மனங்களினதும்
ஏக சாட்சிகளாய்

இன்றும்
குருதியினால்
வரையப்படும்
கொடூரக் கவிதைகள்
தான் நம் தமிழ் இனம்

விதி விடும் ஆசை,

பால் மனம் மாறும் 
வயதிலும் பாசம் காட்ட 
அன்னை வேண்டும்..!

பள்ளி செல்ல
மறுக்கும் வயதில்
பார்வையிலே பயம்
காட்டும் என் பாசமிகு
தந்தை வேண்டும்

பாவையர் கண்ணில் சிக்க
பரிந்து போய் காதல் சொல்ல
பணிவான தோழி வேண்டும்

பாதை தடுமாறும் கணம்
பத்திரமாய் என்னை தேற்றும்
பண்பான தோழன் வேண்டும்

தஞ்சம் எனக்கொள்ள
நெஞ்சம் ஒன்று இன்றி
நான் தவிக்கும் கதை கேட்க
கன்னி ஒருத்தி என்
காதலியாக வேண்டும்

பாலும் பழமும்
உண்ணும் பொழுது
உயிராய் என்னை ஏந்தி
புது உயிர்க்கு உலகை
காட்டும் கனிவான
மனைவி வேண்டும்

இச்ஜெகம் என்னை
இகழ்ந்த போது கூட
துணிந்து நின்று நான்
துயர்தனில் வாழும்
வெட்கம் கெட்ட என்
வேதனை சொல்ல
வேண்டும்...!
வேண்டும்......!
என்னவள் சாயல்
பெண் குழந்தையும்..........!
என் வடிவில் ஓர்,
ஆண் குழந்தையும்.....................!.

பிரிதலின் பின் புரிதல்

தாய்மண்ணை ஏடாக்கி
சுட்டு விரலை கோலாக்கி
அன்பெனும் மையிட்டு
அகரம் பழக்கிய
அம்மா!

அதிகாலை நேரச் சூரியனை
ஞாபகப் படுத்தும் -என்
அழகிய தந்தை முகமும்...!

இசைக்கேற்று அசைந்தாடும்
மரங்கள் போன்ற -என்
தம்பி பாசம்மும்..!

சிணுங்கி விட்டுச் செல்லும்
தென்றல் போல் தங்கை
அன்பும்..!

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல் குளிர்
பரப்பும் சொந்தபந்த
அரவணைப்பு
என்று...!

கூடலில் உண்டான
இன்பத்தை அனுபவித்த
நான் இன்று...!
பிரிதலினால் உண்டான
வேதனையை தாங்க முடியாமல்
நெருப்பில் விழுந்த புழுவாய்

இறைவா திருப்பிக்கொடு
தேசத்தின் களைகளை..!
கலையவந்த எம் கருவிகளை.!
நாளைய இருளுக்கு விளக்கான
எம் விடிவெள்ளிகளை...!
சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....!
மலர்வதற்குள் பறித்துச்சென்ற-எம்
மனத்தோட்டத்து மல்லிகைகளை
திருப்பிக்கொடுத்துவிடு...

வேண்டுமெனில்
ஈடாக என்னையே தருகிறேன்

Thursday, November 19, 2015

அம்மா

பஞ்சத்துல பிழச்சபோதும் 
பட்டினியப் பாத்ததில்ல
பசிய நானும் கண்டதில்ல
நீ பத்துமாசம் சுமந்ததில

நெஞ்சம் எல்லாம் உன் நினவே
தஞ்சம் கொள்ள யாரும் இல்ல
பிஞ்சு மனம் ஏங்குதம்மா உன்
பஞ்சு மனம் காணாமலே!

ஐஞ்சு வயசினால நான்
அகராதி படிச்சதென்றால்
அம்மா உன் மடியென்று-இவ்
அகிலமும் அறியுமோம்மா?

தாயே நின் பெருமை -என்
சொல்லில் அடங்காதடி,
காய்ச்சல் சுட்ட பொழுதினிலே,
கண்ணீர் சொட்ட நிதம் காத்தாய்.
சான்றோனாய் எனை மாற்ற,
சாதாரணமாய் உனை மாற்றி
சாதிக்க அனுப்பி வைத்தாய்

நீ தரணியை ஆளும் நாள்..
நமக்கினித் தூரமில்ல-நீ
செஞ்ச தர்மமெல்லாம் உன்ன
வாழ வைக்கும் காலம் வரும்
.
ஆராரோ பாட்டு பாடி
அழகாய் வாழ்த்தும் பாடி
அம்மா உன் பிறந்தநாளில்
சிறு கவி நானும் தாரேன்,!
தயவாய் ஏற்று தாயே
தரணி போற்ற வாழ்ந்திடம்மா,!

ஆகாசம் வரை நான் உயர்ந்தாலும்
உன் அன்புக்கென்றும் நான்
அடிமையம்மா,,,,!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா