Monday, November 23, 2015

இது இப்படியுமா?

இன்றைய பொழுது
இயந்திரமாய் உழைத்து
இனியவள் இதயத்தை 

களவாடி விட்டேன்
இனியொரு இன்பம்
இதை விட கிடையாது

கண்கள் நான்கும்
நேர்கோட்டில் நிற்க
சந்திர கிரகணங்கள்
சில நிகழ்ந்தேறின
முத்த மலை -இலங்கை
யுத்தம் போல்
நிகழ்ந்தேறியது


அன்றலர்ந்த மலராய் அவள்
அங்கங்கள் சிவந்து நிற்க
தென்றலாய் வருடி அணைத்து
இதழ்கள் இணைத்தேன்


இன்னும் என்னை அணைத்துக்கொள்
இறுக்கம் என் உடலில் எதோ
சிற்சில அறிவியல் மாற்றத்தை
உண்டாக்குகிறது என்றாய்!


வான்மகளின் முகம்
சிவந்த வெட்கம்,
சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,
என அத்தனை
அழகையும் அழகிய
உன் உருவில்
உணரும் பொழுதில்


உன் அழைப்பில் சிணுங்கிய
என் அலைபேசி கலைத்தது
என் இன்றைய பகல் கனவினை,,,!

0 comments:

Post a Comment