Monday, November 23, 2015

நின் நினைவு

தூரத்தில் இருக்கின்றேன்
துயரத்தில் தான் இருக்கின்றேன்
தூக்கம் இன்றி இருக்கன்
துணையுமின்றி தான் இருக்கன்

துன்பங்கள் என்னை சூழ்ந்த வேலை
தூக்கிவிடவும் எவரும் இல்லை
துயர் பகிர வரவும் இல்லை

தூர தேசம் சென்றதாலோ
தூக்கியெறியும் உறவுகளால்
துனையென்று வந்தவளுக்கு
இணை யாரும் இல்லை என்றேன்.

உனக்கு ஈடு நான் இல்லை 

என்று இடையில் அவள் 
செல்வாள் என்றறியாமல்....!

நீ இன்றி போன நிலையில்
நிரந்தரமாய் நானும் தூங்கி விட்டால்
நீ தந்த காதல் ஒன்றே
நீடூளி வாழ்ந்திடும் என்னுள்

0 comments:

Post a Comment