Monday, November 23, 2015

மனதில் நீயாக..!

மண்ணில் இன்பமெல்லாம்
மங்கையால் வந்ததென்று
பாவையே உன் பிரிவினிலே
பாவி நான் உணர்கின்றேன்,

பணமும் பந்தமும் இன்று
பகையாய் தோணுதே -என்
படுக்கை விரிப்புகள் கூட
இடுக்கண் கூட்டுது.,,,,,,,,,,,.!

குடலை எரிக்கும் மதுவைக்
குடித்து உடலின் வனப்பை
இழக்கவா? இல்லை
வரவுக்கு மேலே செலவுகள்
செய்து உறவுகள் எல்லாம்
துறக்கவா,,,,,,,,?

மைவிழி மாதர்
மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்து
தெருவுக்கு வந்தபின்
எப்படி இருந்த நான் இப்படி
ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில்
ஏதும் பயனில்லை என்றே!

கடல் கடந்து இருந்தாலும்-என்
கனவெல்லாம் நீயாக!
நின்மதியை துளைத்தாலும்
நினைவிலும் நீயாக,,,,
தையலே உன்னை மட்டும்
எண்ணியே வாடுகின்றேன்..........!

0 comments:

Post a Comment