Monday, November 23, 2015

மயான வழி{லி}

பேச்சுகளில் உன் பெயரை
உச்சரிக்க வைத்தாய்
என் பெயர் அருகில் உன் பெயர்

எழுத ஒரு தடவையேனும் -உன்
விரல்கள் முனையவில்லையா??

நீ வரும் நேரங்களுக்கு முன்
என்னை வரவழைத்தாய்
ஏன்? எனக்காய் நீ
ஒரு தடவையேனும் காத்திருக்க
வில்லையா....?

சொல்லிச்செல்.....!
என்னை கிறுக்கன்
என்றுரைக்கும் -இவ்
உலகறியட்டும். உண்மை
காதல் உன்னிடம் உள்ள செய்தியை....!

நீளும்....
இரவின் அமைதி
இதுவரையிலான உன்
மெளனத்திற்கு ஒரு குரல்
கொடுக்கிறது,,,,,!

அது நான்
நினைப்பவைகளையே
இன்றுவரை பேசுகிறது.!!
ஏனோ நீ மட்டும்
இன்றுவரை பேசாமலே
இருக்கின்றாய்...?

துரத்தும் உன் நினைவுகளை
துயர் பகிரும் உறவுகளால்
துரத்தி அடித்திட்டு சில கெட்ட
நினைவுகளையும் உனக்கு
கொடுக்க விரும்புகிறேன்,

பின் ஒரு நாள்..,
என் பிணத்தின் அருகில் -நீ
அழுதுகொண்டிருக்கும் போது
அவை சில நிமிடங்கள் -உன்
அழுகையை நிறுத்தி வைக்க
கூடும் என்ற நம்பிக்கையில்!!
!

0 comments:

Post a Comment