Monday, November 23, 2015

நினைவின் ரணங்கள்.


நட்பெனும் வட்டத்தில் -என் 
வாழ்வு நகைச்சுவையாய் 
செல்கையிலே-நன்மை 
தரும் தரு வென என் வாழ்வில்
நிழலாக வந்தவளே!

இருவரது இறுக்கத்தை
அதிகப்படுத்தும்
அல்லது குறைக்கும்
நம் மௌனங்கள்
கண்ணீரிலா! முடிய வேண்டும்?

நீ பற்றியஞாபகங்கள்
நொந்துபோன மனசின்
பரப்புகளில் அர்த்தமில்லாத
அவஸ்தைகளாய் கனக்கின்றன

ஒரே ஒரு கேள்வி
அகால மரணமாய்
திடீரெனச் செத்துப்போனதே,
நம் உறவு! எப்படி நேர்ந்தது
அது?

இந்த கிறுக்கனின்
கிறுக்கல்கள் கூட
உன் இதயத்தில்
என் பெயரை
கிறுக்கவில்லையா?

வேண்டாம் நான்
ஒன்றும் உன்னிடம் கேட்டு
உன்னை துன்புறுத்தவில்லை

மனதை தொட்டு சொல்
உனக்கு என்மேல்
ஒரு நொடியேனும்
மெய்க்காதல்
வரவில்லையா???

0 comments:

Post a Comment